Skip to main content

இரண்டே வாரத்தில் சான்றிதழ் வாங்கிய திரிஷா!  

Published on 18/11/2020 | Edited on 18/11/2020
tris

 

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா, தற்போது இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில் நடித்து வருகிறார். கடந்தாண்டு  ஆரம்பித்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா தோற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், விரைவில்  இப்படத்தின்  படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

'பொன்னியின் செல்வன் படத்தில், திரிஷா குந்தவையாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. சமீபத்தில் திரிஷா, குதிரையேற்றம் கற்றுக்கொள்ளும் படங்களை தனது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார். பொன்னியின் செல்வன் படத்திற்காகத்தான் திரிஷா குதிரையேற்றம் கற்றுக்கொள்ளுவதாக கூறப்படுகிறது.

 

இந்தநிலையில் குதிரையேற்றத்தில் தொடக்க நிலை பயிற்சியை முடித்துள்ளார் திரிஷா. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள திரிஷா, பயிற்சியை முடித்ததற்கான சான்றிதழ்களையும் பதிவிட்டுள்ளார். குதிரையேற்றத்தின் அறிமுக வகுப்பை ஆறு நாட்கள், தொடக்க நிலை வகுப்பை 6 நாட்கள்  என இரண்டே வாரத்தில்  திரிஷா, குதிரையேற்றத்தை கற்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்