Skip to main content

அம்பேத்கர், காந்தி குறித்துப் பேசிய ஜான்வி கபூர் - இணையத்தில் வைரல்

Published on 25/05/2024 | Edited on 27/05/2024
janhvi kapoor about ambedkar gandhi

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மகளான ஜான்வி கபூர், பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தென்னிந்திய சினிமாவில், ஜூனியர் என்.டி.ஆரின் தேவாரா படம் மூலம் அறிமுகமாகிறார். தமிழில் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடாதப் படத்தில் கதாநாயகியாக நடிக்கப் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தகவல் உலா வருகிறது.  

இந்த நிலையில் இந்தியில் அவர் நடித்துள்ள ‘மிஸ் அண்ட் மிஸஸ் மஹி’ படம் மே 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ராஜ்குமார் ராவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையபடுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் தற்போது புரொமோஷன் பணிகளில் பிஸியாகவுள்ளார். அந்த வகையில் சமீபத்திய ஊடகப் பேட்டி ஒன்றில் பேசிய ஜான்வி கபூர், அம்பேத்கர் மற்றும் காந்தி குறித்து பேசியுள்ளார். அந்தப் பேட்டியில், நெறியாளரின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து வந்த ஜான்வி கபூர், தனக்கு வரலாற்றில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகக் கூறினார். உடனே அந்த நெறியாளர், வரலாற்றில் எந்த காலகட்டத்திற்கு திரும்பிச் செல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஜான்வி கபூர், “நான் நேர்மையாக பதிலளிப்பேன். ஆனால் என்னுடைய கருத்தை யாருடனும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய பார்வை பார்வையாளர்களுடன் பொருந்தாமல் போகலாம்” என்றார். 

பிறகு பதிலளிக்க தொடங்கிய ஜான்வி கபூர், “தேசத் தந்தை மகாத்மா காந்தி மற்றும் இந்திய அரசியலமைப் தந்தை பி.ஆர்.அம்பேத்கர் இருவரும் சாதி பற்றி விவாதிப்பதைப் பார்க்க ஆசைப் படுகிறேன். இருவரும் இந்தியச் சமூகத்தை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்கள். அவர்களின் சித்தாந்தங்களுக்கிடையேயான உரையாடலையும், பல்வேறு தலைப்புகளில் அவர்களின் எண்ணங்கள் எவ்வாறு உருவாகின என்பதையும் பார்க்க விரும்புகிறேன். அம்பேத்கர் சாதிக் குறித்தான தனது நிலைப்பாட்டில், ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் இருந்தார் என நினைக்கிறேன். ஆனால் காந்தி சாதிக் குறித்து தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ள அவரது நிலைப்பாடு பரிணமித்துக் கொண்டே இருக்கிறது. நம் சமூகத்தில் இருக்கும் இந்தச் சாதிய பிரச்சினை மூன்றாம் நபரிடமிருந்து கேட்பதற்கும் சாதிப் பிரச்சனைகளை சந்தித்து வாழ்பவர்களின் வழியாக கேட்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது” என்றார்.  

பின்பு அவரிடம் “உங்கள் பள்ளியில் சாதி குறித்து விவாதம் நடக்குமா?” என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் இல்லை எனப் பதிலளித்த அவர், பள்ளியில் மட்டுமல்ல, எனது வீட்டிலும் கூட அது தொடர்பான விவாதம் நடந்தது கிடையாது என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

சிம்பு படத்தில் இணையும் பாலிவுட் நடிகைகள் 

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
janhvi kapoor and kiara advani to act in str 48

சிம்பு தற்போது கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு முன்பாக கமல் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். அப்படம் சிம்புவின் 48வது படமாக உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. 

இப்படத்திற்காக சிம்பு வெளிநாட்டில் சிறப்பு பயிற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டது. வரலாற்று பின்னணியில் ஆக்ஷன் நிறைந்த மாஸ் படமாக இப்படம் உருவாவதாக திரை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனிடையே கடந்த சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வாழ்த்து போஸ்டரை வெளியிட்டது. அதில் சிம்பு இரண்டு கெட்டப்பில் தோன்றியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்தது. 

janhvi kapoor and kiara advani to act in str 48

இப்படத்தின் ஹீரோயினாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, பின்பு கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியின. இந்த நிலையில் தற்போது லேட்டஸ்ட் தகவலாக பாலிவுட் நடிகைகள் ஜான்வி கபூர் மற்றும் கியாரா அத்வானி இருவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் தகவல் உண்மையாகும் பட்சத்தில் இரு நடிகைகளுக்குமே இந்தப் படம் கோலிவுட்டின் அறிமுகம படமாக இருக்கும் எனத் தெரிகிறது.   

Next Story

விபத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள்; நேரில் சென்ற அமைச்சர்!

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
18 people were seriously injured in a private bus accident and are undergoing treatment at the hospital

சென்னை நோக்கி  வேன் ஒன்று தனியார் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, தொழிலாளர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து வாலாஜாப்பேட்டை  சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னாள் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உட்பட 18 பேர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்தவர்களை வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை கைத்தறி மற்றும்  துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க மருத்துவர்களை கேட்டுக்கொண்டார்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 18 ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்து காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.