Skip to main content

பிரபல பாடகருக்கு விபத்து - மருத்துவமனையில் அனுமதி

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

Singer Papon hospitalised

 

அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாடகர் அங்கராக் மஹந்தா. இசையுலகில் பபோன் (Papon) என்ற பெயரில் தமிழ், இந்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடியுள்ளார். தமிழில் 'காற்றில் ஏதோ புது வாசம்...' (வணக்கம் சென்னை), 'ஹலோ ஹலோ...' (வலியவன்), 'பப்லி பப்லி...' (போக்கிரி ராஜா) உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார். 

 

இந்த நிலையில் பாடகர்  பபோனுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த அவர் விபத்து குறித்து பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "நாம் அனைவரும் இந்த சிறிய போர்களில் தனியாக போராடுகிறோம். இந்த சம்பவங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவது எனக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்கவில்லை. 

 

13 வயது உள்ள எனது மகன் மருத்துவமனையில் இரவு உதவியாளராக இருப்பது இதுவே முதல் முறை. இது ஒரு உணர்ச்சிகரமான தருணம் மற்றும் எனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் இப்போது நன்றாக உடல் தேறி வருகிறேன்" என பதிவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

12 வயது நவ்யா உமேஷ் பாடியுள்ள இறைவி பாடல்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
12 year old Navya Umesh sung iraivi album

சர்வதேச செஸ் ஒலிம்பியாட், குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட், கேலோ இந்தியா என குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமல்லாது மாவீரன், ஜெயிலர், ஜவான் மற்றும் லால் சலாம் படங்களின் ஆடியோ லான்ச், எனப் பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கலை இயக்குநரும் நிகழ்வு மேலாளருமான உமேஷ் ஜே குமார் மற்றும் நிகழ்வு மேலாளர் ராகிணி முரளிதரன் ஆகியோரின் மகள் நவ்யா உமேஷ்.

ஏழாம் வகுப்பு படித்து வரக்கூடிய இவர், பாடி நடித்த ‘இறைவி’ பாடல் மகளிர் தின கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. வெங்கடேசன் இயக்கியுள்ள இப்பாடலை நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். சமூக தொழில் முனைவோர் தீப்தி வரிகளை எழுதியுள்ளார். ‘என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் ‘கட்சி சேரா’ போன்ற வைரல் வீடியோக்களுக்கு நடனம் அமைத்த ‘தி டான்சர்ஸ் கிளப்’ இந்தப் பாடலுக்கான நடனம் அமைத்துள்ளனர். சோனி மியூசிக்கில் மகளிர் தினத்தன்று வெளியாகியுள்ள இந்தப் பாடலை, இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.

Next Story

பிரபல பாடகர் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
prime minister narendra modi condolence to Ghazal singer Pankaj Udhas passed away

பிரபல கஸல் பாடகர் பங்கஜ் உத்வாஸ் பாலிவுட்டில் பல படங்களுக்குப் பாடியுள்ளார். திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது 2006 ஆம் ஆண்டு வழங்கியது. குஜராத்தை சேர்ந்த அவர் சமீப காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (26.02.2024) பங்கஜ் உத்வாஸ் (72) இறந்துள்ளார். இவரது மறைவு இசைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரது மறைவிற்கு திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் அஞ்சலி பதிவு பகிர்ந்து வருகின்றன. 

அந்த வகையில் பிரதமர் மோடி அவரது எக்ஸ் பக்கத்தில், “பங்கஜ் உத்வாஸின் இழப்பிற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். அவரது பாடல் பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. அவரது கஸல்கள் ஆத்மாவுடன் நேரடியாக பேசுகின்றன. அவர் இந்திய இசையின் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்தார். அவரின் மெல்லிசை பாடல்கள் தலைமுறைகளைத் தாண்டியது. பல ஆண்டுகள் அவருடனான எனது பல்வேறு உரையாடல்களை நினைவுகூர்ந்தேன். அவரது இடம் இசை உலகில் ஒருபோதும் நிரப்ப முடியாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.