Skip to main content

அடுத்த படத்தின் பணிகளை பூஜையுடன் தொடங்கிய சசிகுமார்!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

sasikumar

 

'எம்.ஜி.ஆர் மகன்', 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'ராஜவம்சம்', 'பகைவனுக்கு அருள்வாய்' உட்பட பல படங்களைக் கைவசம் வைத்துள்ள நடிகர் சசிகுமார், தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். தற்போது அனீஸ் இயக்கத்தில் உருவாகிவரும் 'பகைவனுக்கு அருள்வாய்' படத்தில் சசிகுமார் கவனம் செலுத்திவருகிறார். 

 

இந்த நிலையில், சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹேமந்த் குமார் இயக்கவுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசையமைக்கிறார். கிராமப் பின்னணியில் ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாகவுள்ள இப்படத்திற்கு நடிகர், நடிகை தேர்வு தற்போது நடைபெற்றுவருகிறது. இப்படத்திற்கான முதற்கட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்