Skip to main content

“என்ன செய்றாங்கன்னு தெரியணும்” ; அம்மாவை சந்தேகித்த மகன் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 21

Published on 14/08/2023 | Edited on 14/08/2023

 

detective-malathis-investigation-21

 

பெற்ற தாய் மீது மகன் சந்தேகப்பட்டு விசாரிக்கச் சொன்ன வழக்கு பற்றி முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.

 

மகன் ஒருவர் தன்னுடைய தாய் குறித்து விசாரிக்கச் சொல்லி நம்மிடம் வந்தார். அவருடைய தாய் கிராமத்தில் இருந்தார். மகன் இந்தியாவின் வேறு ஒரு பகுதியில் வேலையாக இருந்தார். ஊரில் நிலத்திலிருந்து வருமானம் வந்தாலும், தானும் பணம் அனுப்பினாலும், தன்னுடைய தாய் அதிகமாக செலவு செய்கிறார் என்று மகன் குற்றம் சுமத்தினார். இவ்வளவு பணத்தைத் தன்னுடைய தாய் என்ன தான் செய்கிறார் என்று தனக்குத் தெரிய வேண்டும் என்று அவர் கூறினார். இந்தப் பிரச்சனை பல குடும்பங்களில் நடக்கிறது. அவருடைய தாயை நாம் பின்தொடர ஆரம்பித்தோம். 

 

பணத்தையெல்லாம் தன்னுடைய இளைய மகளுக்கு அவர் செலவழித்து வந்தது தெரிந்தது. அவருக்கு வீடு கட்டிக் கொடுத்தது முதல் பல்வேறு வகைகளில் அவருக்காக தன்னுடைய பணத்தை அவர் செலவழித்தார். தான் இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கும்போது, தான் அனுப்பும் பணத்தை தன்னுடைய தங்கைக்காக தாய் இவ்வாறு செலவழிக்கிறார் என்று மகன் வருத்தப்பட்டார். குடும்பத்தில் மூத்த பிள்ளை இளைய பிள்ளைக்கு உதவ வேண்டும் என்பது நம்முடைய நாட்டில் எழுதப்படாத ஒரு விதியாக இருக்கிறது. 

 

ஒருவருக்கு மீன் தருவதை விட மீன் பிடிக்கக் கற்றுத் தருவதே சிறந்தது. மூத்த பிள்ளை தான் இளைய பிள்ளையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலையை ஏற்படுத்துவதை விட, வாழ்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதை இரு பிள்ளைகளுக்குமே கற்றுத் தருவது தான் பெற்றோரின் கடமை. இல்லையெனில் இருவரில் ஒருவர் மட்டுமே வளமாக வாழ முடியும்.

 

"நீங்கள் இருக்கும்வரை மூத்த பிள்ளையிடமிருந்து வாங்கி இளைய பிள்ளைக்குக் கொடுப்பீர்கள். அதன் பிறகு அவர் என்ன செய்வார்? அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்" என்கிற புரிதலை அந்த அம்மாவுக்கு கவுன்சிலிங் மூலம் நாங்கள் ஏற்படுத்தினோம். அம்மா தன்னுடைய பணத்தை எல்லாம் செலவு செய்து விட்டார் என்று அவர் தன்னை ஏமாற்றியதாகவும் நினைத்து வருந்திய மகனுக்கும் சில விசயங்களை சொல்லி புரிய வைத்தோம். 

 

 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.