Skip to main content

ஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்!!! பகுதி- 15

Published on 13/12/2019 | Edited on 06/01/2020


புனே பாஜக தலைவரின் நில ஊழல்!  PUNE LAND SCAM (MAHARASHTRA)

மகாராஸ்டிரா மாநிலம் புனேவில் பாஜக-சிவசேனா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ராஜ் புரோஹித். 1995-1999 காலகட்டத்தில் இவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி, நகர்ப்புற நில கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் சில உத்தரவுகளை பிறப்பித்தார். இதன்மூலம், நிலம் கையகப்படுத்துதலில் இருந்து புனேவுக்கு விலக்கு அளித்தார். இது 2005ல் அம்பலமானது. இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் தனிநபர்கள் ஆயிரக்கணக்கான சதுர அடி நிலத்தை கைப்பற்ற அவர் உதவியிருப்பது தெரியவந்தது. 

உத்தரப்பிரதேச பாஜக அரசின் பெட்ரோல் பம்ப் ஊழல்! PETROL PUMP SCAM (UP)

 

nm



ஒரு பெட்ரோல் பம்ப்புக்காக சாலையை அகலப்படுத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தின் முதன்மை செயலாளர் ஷஷி பிரகாஷ் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. ஹர்டோய் நகரில் பெட்ரோல் பம்ப் இருக்கும் சாலை குறுகலாக இருந்ததாகவும், அதை அகலப்படுத்தும்படி உரிமையாளர் கேட்டதாகவும், அதற்காக 25 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் புகார் கூறப்பட்டது.

ரேசனில் 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்!  PDS SCAM (CHHATTISGARH)

 

bn



சத்தீஷ்கர் மாநில பாஜக முதல்வர் ராமன் சிங் ரேசன் வினியோகத்தில் முறைகேடு செய்து 36 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தது அம்பலமானது. மக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசியில் முறைகேடு செய்திருப்பதை மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆவணங்களுடன் கண்டுபிடித்தனர். ரேசன் வினியோக கழகத்தின் 36 அலுவலகங்களில் அவர்கள் நடத்திய சோதனையில் 36 ஆயிரம் கோடி ரூபாம் மீட்கப்பட்டது. இந்த ஊழலில் பாஜக அரசுக்கு இருக்கும் தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

பியூஷ்கோயல் ஊழல்!  PIYUSH GOYAL SCAM

மோடி அரசில் மத்திய அமைச்சரான பியூஷ்கோயல் அரசுக்கு தெரிவிக்க வேண்டிய உண்மையை மறைத்து மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்தார். அதாவது மத்திய அமைச்சராக இருப்பவர் வேறு நிறுவனங்களில் பங்குகளோ, பொறுப்புகளோ வகிக்கக்கூடாது. ஆனால், பியூஷ்கோயலும் அவருடைய மனைவியும் ப்ளாஷ்நெட் இன்போ சொல்யூசன்ஸ் (இந்தியா) லிமிடெட் என்ற கம்பெனியில் இயக்குனர்களாக இருந்திருக்கின்றனர். இந்த உண்மையை பியூஷ்கோயல் அரசுக்குத் தெரிவிக்காமல் மறைத்திருந்தார். உண்மை வெளியாகி அவர்கள் பொறுப்பிலிருந்து விலகினாலும், அந்த நிறுவனத்தின் 99 சதவீத பங்குகளை அவர்கள் வைத்திருந்தனர். 
 

 

nb



பியூஷ் கோயலின் மனைவிக்கு 10 ஆண்டுகளில் 3 ஆயிரம் மடங்கு லாபம்! PIYUSH GOYAL-SHIRDI INDUSTRIES SCAM

அமித் ஷா மகன்  ஒரே ஆண்டில் ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதித்து சாதனை புரிந்ததைப் போல, பியூஷ் கோயலின் மனைவிக்கு சொந்தமான ஒரு நிறுவனம் 10 ஆண்டுகளில் 3 ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதித்து சாதனை புரிந்தது. பாஜகவினருக்கே சொந்தமான இந்த சாதனை அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. பியூஷ் கோயலின் மனைவி சீமா 1 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஒரு கம்பெனியை தொடங்கினார். அது 10 ஆண்டுகளில் 30கோடி ரூபாய் சம்பாதித்தது. அதுபோல, ராகேஷ் அகர்வால், முகேஷ் பன்சாலி என்ற பியூஷ்கோயலின் நண்பர்களுக்குச் சொந்தமான ஷிர்டி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற கம்பெனிக்கு பல்வேறு வங்கிகளுக்கு எந்த ஆவணங்களும் இல்லாமல் 650 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கேள்வித்தாள் அம்பலத்தில் ஊழல்!  QUESTION PAPER LEAK SCAM

2017 ஆம் ஆண்டு மத்திய அரசு நடத்திய ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான சிஜிஎல் தேர்வுக்கான எஸ்எஸ்சி கேள்வித்தாள்களும் அதற்குரிய விடைத்தாள்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். வேலைவாய்ப்பில் மோசடி செய்யும் மிகப்பெரிய குழு ஒன்றுக்கு இதில் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த தேர்வை 9 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊழல் தொடர்பாக மோடி அரசு ஒரு வார்த்தைகூட விளக்கம் அளிக்கவில்லை. எதையும் கண்டுகொள்ளாமல் மவுனமாக இருந்தால் அந்த பிரச்சனை காணாமல் போகும் என்ற மோடி அரசின் செயல்பாடுகளுக்கு இதுவும் ஒரு உதாரணமாக ஆனது.
 

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.