Skip to main content

ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறும் சுரேஷ் ரெய்னா?

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

suresh raina

 

ஐபிஎல் ஏலம் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த ஏலத்தில் சென்னை உட்பட எந்த அணியும், சுரேஷ் ரெய்னாவை  வாங்கவில்லை. இதன் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் சுரேஷ் ரெய்னா பிக் பாஷ் லீக், கரீபியன் பிரீமியர் லீக் போன்ற வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட அனுமதிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

ஐபிஎல்-ல் போட்டிகளிலிருந்து ஒய்வு பெற்றால் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதியளிக்கும் என்பதால் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிக்கபோகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. யுவராஜ் சிங் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பின்னர்தான் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 லீக்கில் விளையாட அனுமதியளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.