Skip to main content

பாகிஸ்தான் வெற்றி..மோதிக்கொண்ட ரசிகர்கள்..மைதானத்தில் திக் திக் நிமிடங்கள் 

Published on 08/09/2022 | Edited on 08/09/2022

 

Pakistan win..Clashing fans.. minutes on the field

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. சூப்பர் 4 சுற்றிற்கு 4 அணிகள் தயாரான நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணிகள் மோதின.

 

முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் ஜார்டன் 35 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் இரண்டு விக்கெட்களை எடுத்தார்.

 

130 ரன்கள் இலக்கை கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஒவரில் முதல் இரு பந்துகளில் சிக்சர்களை அடித்து நசீம் ஷா ஆட்டத்தை முடித்து வைத்தார். பாகிஸ்தான் அணி சார்பில் ஷதாப் கான் 36 ரன்களை எடுத்தார்.

 

நேற்று ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது என சொல்லப்பட்டது. இதனால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போட்டியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் ஆவலுடன் பார்த்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிபெற்றுள்ளது. இது இந்திய அணி ஆசியா கோப்பையில் இருந்து வெளியேற வழிவகை செய்துவிட்டது.

 

போட்டியின் நடுவே ஆசிப் அலி 16 ரன்களை எடுத்திருந்த போது பரீத் அஹமது பந்தில் அவுட்டானார். அப்போது இரு வீரர்களுக்கும் வாக்குவாதம் எழுந்தது. அப்போது ஆசிப் அலி தனது பேட்டால் அஹமதுவை அடிக்க ஓங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

போட்டி முடிந்த பிறகு இருநாட்டு ரசிகர்களும் மோதிக்கொண்டனர். போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதால் ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் மைதானத்தின் இருக்கைகளை உடைத்தும் அதனை பாகிஸ்தான் நாட்டு ரசிகர்கள்  மீது வீசி எறிந்தனர். இதனால் இரு நாட்டினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டதால் மோதலில் ஈடுபட்டவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

 

 

Next Story

இறுதிக் கட்டத்தில் மகளிர் ஆசியக்கோப்பை; இந்தியா இலங்கை பலப் பரீட்சை

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

Women's Asia Cup in Finals; India Sri Lanka Multiple Exam

 

பெண்களுக்கான ஆசியக்கோப்பை  இறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியும் இலங்கை மகளிர் அணியும் இன்று பிற்பகல் மோத உள்ளன. 

 

மகளிர் ஆசியக் கோப்பையின் எட்டாவது தொடர் வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒரு லீக் ஆட்டத்தை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

 

ஏழு நாடுகள் பங்கேற்ற இந்த தொடரில் அரையிறுதியில் தாய்லாந்தை வீழ்த்தி இந்தியாவும் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கையும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. ஆசியக்கோப்பை வரலாற்றில் இந்தியா தொடர்ந்து எட்டாவது முறையாகவும் இலங்கை ஐந்தாவது முறையாகவும் தகுதி பெற்றுள்ளது. இதுவரை 7 முறை நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி வென்றுள்ளது.

 

இன்று நடக்கும் ஆட்டத்தில் வெற்றி பெற்று ஏழாவது முறையாக கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ஆசியக்கோப்பை போட்டியில் பந்துவீச்சில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி சர்மா 13 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.  அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 215 ரன்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார். அதிக வெற்றிகளைப் பெற்றதிலும் இந்திய அணியே முதலிடத்திலுள்ளது.

 

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

 


 

Next Story

ஆசியா கோப்பை: கணிப்புகளைப் பொய்யாக்கிய பாகிஸ்தான்... வென்று காட்டிய இலங்கை

Published on 12/09/2022 | Edited on 12/09/2022

 

Asia Cup; Pakistan belied predictions.. Sri Lanka showed victory..

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன. சூப்பர் 4 சுற்றிற்கு 4 அணிகள் தயாரான நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் இடங்களை பிடித்த பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் நேற்று இறுதி போட்டியில் விளையாடியது.

 

டாஸ் வென்ற பாகிஸ்தான் இலங்கையை பேட்டிங் செய்ய அழைத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் சொற்ப ரன்களில் வெளியேறினார். இலங்கை அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாற பனுகா ராஜபக்ஷே, ஹசரங்கா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஹரிப் ரவுப் 3 விக்கெட் எடுத்தார்.

 

171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் இலங்கையின் சிறப்பான பந்துவீச்சில் தொடர்ச்சியாய் விக்கெட்களை பறிகொடுத்தது. அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 55 ரன்களும் இப்திகார் அகமது 32 ரன்களும் எடுத்திருந்தனர். பாகிஸ்தான் சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் எடுத்தனர். 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை 6 வது முறையாக கோப்பையை வென்றது.

 

பனுகா ராஜபக்ஷே ஆட்டநாயகன் விருதையும் ஹஸரங்கா தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.