Skip to main content

ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் சர்ச்சைக்கு கோலியின் காட்டமான பதில்...

Published on 11/01/2019 | Edited on 11/01/2019

 

tgtr

 

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோது ஓருநாள் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் இன்று இந்திய கேப்டன் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை பற்றி மோசமான கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் பற்றிய கேள்விக்கு பதிலளித்தார் கோலி. அதில், 'இந்திய கிரிக்கெட் அணி இதுபோன்ற கருத்துக்களை ஒருபோதும் ஆதரிக்காது என்பதுடன், இந்திய கிரிக்கெட் அணி மற்றும் அதன் பொறுப்பான கிரிக்கெட் வீரர்களின் ஒட்டுமொத்த கருத்தாக இதனை பார்க்க கூடாது. இவை முற்றிலும் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்களாகவே இருக்கின்றது. அந்த இரண்டு வீரர்கள் தவறு செய்ததை உணர்ந்திருக்கிறார்கள். மேலும் இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றியும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர்' என கூறினார். மேலும் நாளை தொடங்கும் ஒரு நாள் போட்டியில் பாண்ட்யா விளையாடுவாரா என்பதை தேர்வு குழுதான் முடிவு செய்யும் எனவும் கூறினார்.