Skip to main content

அதிர்ச்சி தொடக்கம்; கடினமான இலக்கை துரத்தும் இந்தியா!

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

india vs england first test

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 578 ரன்கள் குவித்தது.

 

அதற்குப்பிறகு ஆடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. புஜாரா (73), பந்த் (91) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும், கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தரின் போராட்டத்தாலும் இந்திய அணி 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சுந்தர் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.  

 

இதனையடுத்து ஆடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. ஜோ ரூட் மட்டும் 40 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அட்மிழந்தது. இதனையடுத்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 39 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. இந்தியா, வெற்றிப் பெற இன்னும் 381 ரன்கள் தேவை என்ற நிலையில், நாளை இறுதிநாள் ஆட்டம் நடைபெறுகிறது.