Skip to main content

ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் கைது; டி.ஜி.பி. சங்கர் ஜிவால் முக்கிய ஆலோசனை!

Published on 16/06/2025 | Edited on 16/06/2025

 

 ADGP Jayaraman arrested DGP Shankar Jiwal gives important advice
ஏ.டி.ஜி.பி. ஜெயராமன்

திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியில் உள்ள ௧௬ வயது சிறுவனின் அண்ணன் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அந்த சிறுவனைக் கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.  முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் காரில் கடத்தி செல்லப்பட்டு மிரட்டப்பட்டார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முன்ஜாமீன் கோரி பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (16.06.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனும், பூவை ஜெகன்மூர்த்தியும் பிற்பகல் 02:30 மணி அளவில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனையடுத்து பூவை ஜெகன்மூர்த்தியும், ஏ.டி.ஜி.பி. ஜெயராமனும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது இந்த வழக்கு விசாரணையின் போது ஆள் கடத்தல் வழக்கில் ஏடிஜி.பி. ஜெயராமனைக் கைது செய்யுங்கள் என நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் ஏடிஜி.பி. ஜெயராமனை காவல்துறையின் பாதுகாப்பில் வையுங்கள் என நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமனைக் காவல் சீருடையிலேயே போலீசார் கைது செய்துள்ளனர்.

அதன் பின்னர் அவர் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு ஏ.டி.ஜி.பி. ஜெயராமன் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர்களோடு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், ஐ.ஜி. உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் நீதிமன்ற வளாகத்திற்குள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் அடுத்த கட்டமாக இந்த வழக்கை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்தும் தற்போது நீதிமன்ற வழகத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்