Skip to main content

Ind vs NZ: தோனியின் சாதனையை சமன் செய்வாரா கில்?

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

Ind vs NZ: Will Gill equal Dhoni's record?

 

உலகக் கோப்பையின் 21வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே தரம்சாலாவில் இன்று நடைபெற உள்ளது.

 

இரு அணிகளும் வலிமை வாய்ந்த அணிகள் என்பதால் இந்த ஆட்டத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 116 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 58 முறையும் நியூசிலாந்து அணி 50 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஏழு முறை போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை. ஒரு முறை ஆட்டம் டையில் முடிந்துள்ளது.

 

ஒருநாள் கிரிக்கெட்டின் வரலாறு இந்திய அணிக்கு சாதகமாக இருக்க, உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியின் வரலாறு சற்றே கவலைக்குரிய நிலையில் உள்ளது. உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எட்டு முறை மோதியுள்ளன. இதில்  நியூசிலாந்து 5 முறையும் இந்திய அணி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

 

முக்கியமாக கடந்த 2019  உலகக்கோப்பையை இந்திய ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இந்திய அணி கட்டாயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தோனியின் ரன் அவுட்  இந்திய ரசிகர்களுக்கு பெரும் இடியாக அமைந்தது. எனவே, கடந்த உலகக் கோப்பையில் பெற்ற தோல்விக்கு பதிலடி தரும் வகையில், இன்று இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பு காட்டும்.

 

இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. எனவே ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் அஷ்வினா அல்லது சூரிய குமாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

nn

 

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கில் இன்று சிறப்பாக விளையாடினால், ஒருநாள் போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற இடத்தைப் பிடிக்க முடியும். கடந்த ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் போட்டியில் பாபர் அசாம் 9 ரன்கள் அல்லது அதற்கும் குறைவாக எடுத்திருந்தால் சுப்மன் கில் ஒரு நாள் போட்டி தரவரிசைகளில்  நம்பர் ஒன் இடத்தை பிடித்து தோனியின் சாதனையை ( 38 ஒரு நாள் போட்டிகள்) முந்தி 37 ஒரு நாள் போட்டிகளில் குறைந்த ஆட்டங்களில் இந்த சாதனையை செய்த இந்திய வீரராக மாறி இருப்பார். எனவே இன்றைய ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடி தோனியின் சாதனையை சமன் செய்து ஒரு நாள் போட்டி தரவரிசைகளில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார் என்று  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த உலக இந்த உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் வெல்லும் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

போட்டி நடைபெறும் தரம்சாலா மைதானம் சுழலுக்கு சாதகமாக இருக்கும். இந்த மைதானத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களே சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எனவே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கூடுதல் சுதாரிப்புடன் விளையாடினால், இந்திய அணி எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மேலும் நியூசிலாந்து அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ளதால், அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் அஸ்வின் இடம்பெற்றால், இந்திய அணிக்கு அது கூடுதல் பலமாக இருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

வெ.அருண்குமார்  

 

 

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; இந்தியா வெளியிட்ட அறிக்கை!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
India is of the opinion that peace should return to the Israel-Iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல், ஈரான் மோதல் விவகாரத்தில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் ஏற்பட்டது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

“இந்தியா உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரமாக மாறும்” - ஜெ.பி.நட்டா பேச்சு!

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
India will become the 3rd largest economy in the world JP Natta speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் நாடு, வளர்ச்சியில் நீண்ட பாய்ச்சலைப் பெற்றுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியா உலகின் 11வது பொருளாதார சக்தியாக இருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரைன் போருக்குப் பிறகும், பிரதமர் மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 200 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டனை இந்தியா தோற்கடித்துள்ளது. இப்போது இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2024 இல், பிரதமர் மூன்றாவது முறையாக பிரதமராகும் போது, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும்.

இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். ஒரு சிலர் சிறையில் இருக்கிறார்கள். ராகுல் காந்தி, சோனியா காந்தி, ப. சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் இருக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் சத்யேந்தர் ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் சிறையில் உள்ளனர். திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை ஒழிக்க திமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்ட விவகாரத்திலும் தமிழர்களின் பண்பாட்டை காங்கிரஸ் மற்றும் திமுக எதிர்த்தது. தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது. தமிழ் இலக்கியம், மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு பாஜக உறுதியாக துணை நிற்கிறது” எனத் தெரிவித்தார்.

அதே சமயம் திருச்சியில் ஜே.பி.நட்டா இன்று ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக இன்னும் சற்று நேரத்தில் விசாரிக்கப்பட உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.