Skip to main content

ஆசியக் கோப்பை; முதல் ஆட்டத்தில் 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Asia Cup; Pakistan won the first match by 238 runs

 

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நேற்று(30ம் தேதி) பாகிஸ்தான் மற்றும் நேபாள அணி விளையாடியது. போட்டியில் பாகிஸ்தான் அணி  238 ரன்கள் வித்தியாசத்தில் நேபாள அணியை வீழ்த்தியது.

 

இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. பாகிஸ்தானின் தொடக்க ஆட்ட வீரர் ஃபக்கர் சாமான் 14 ரன்களில் ஆட்டம் இழக்க, அடுத்து களமிறங்கிய இமாம் உல் ஹக் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். அடுத்து பேட் செய்ய வந்து சிறப்பாக ஆடிய ரிஸ்வான் 44 ரன்களோடு வெளியேறினார்.

 

இவர்களுக்கு பின்னர் வலுவாக ஒன்றிணைந்த பாபர் அசாம், இப்திகார் அஹ்மத் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் இரு சதங்கள் அடித்து ஐந்தாவது விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தனர். பாபர் அசாம் 131 பந்துகளில் 14 பௌண்டரி, 6 சிக்சர்களை அடித்து 151 ரன்களை குவித்தார். இப்திகார் அஹ்மத் 71 பந்துகளை எதிர்கொண்டு 109 ரன்களை எடுத்தார். இருவரின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் அணி முதல் பாதியில் 6 விக்கெட் இழந்து 50 ஓவருக்கு 342 ரன்கள் எடுத்திருந்தது.

 

நேபாள் வீரர் சோமபல் காமி இரண்டு விக்கெட்டுகளை எடுக்க கரன், சந்தீப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் எடுத்தனர்.

 

முதல் முறை ஆசிய கோப்பையில் விளையாடிய நேபாள் அணியினருக்கு 342 ரன் இமாலய இலக்காகவே இருந்திருக்கும். இரண்டாம் பாதியில் களமிறங்கிய நேபாளின் தொடக்க வீரர் ஆசிப் ஷேக் சொற்ப ரன்களில் வெளியேற, குஷால் 8 ரன்கள் என ஏமாற்றமளிக்க. அணியின் கேப்டன் ரோகித், டக் அவுட் ஆகி மேலும் அதிர்ச்சியை அளித்தார். ஆரம்பத்திலே திணறிய நேபாள் அணி 14 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து, ஆசிப் ஷேக் - சோமபல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்களின் முயற்சியும் முறிந்து, ஷேக் 26 ரன்களும், சோமபல் 28 ரன்களுடன் ஆட்டம் இழக்க, குல்சானும் 13 ரன்களே எடுத்து வெளியேறினார்.

 

90 ரன்களை நேபாள் எட்டியபோது 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. அடுத்து விளையாடிய வீரர்கள் மொத்தமாக 14 ரன்களே சேர்த்து நேபாள் அணி ஆல்-அவுட் ஆனது. 

 

பாகிஸ்தான் அணியின் சதாப் கான் 4 விக்கெட்டுகளை எடுத்தார். தொடர்ந்து, சாஹின் அப்ரிடியும் ரௌஃப்வும் தலா 2 விக்கெட்டுகள், நவாஸ் மற்றும் நசீமும் தலா 1 விக்கெட் எடுத்தனர். பந்து வீசிய அனைவரும் விக்கெட் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

23.4 ஓவர்கள் வரை தாக்குப் பிடித்த நேபாள அணியால் 104 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று. பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஆட்ட நாயகன் விருதை 151 ரன்கள் எடுத்த பாபர் அசாம் பெற்றார்.

 

முதல் போட்டியிலே பெரும் வெற்றியைப் பெற்ற முனைப்பில் இருக்கும் பாகிஸ்தான் அணி செப்டெம்பர் 2 இந்தியாவை பல்லேகலே ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. இரு அணிகளும் வலுவாக இருப்பதால் கடுமையான போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டம் இலங்கை பல்லேகலேவில் பிற்பகல் 3  மணிக்கு தொடங்குகிறது. சென்ற வருடம் நடந்த இருபது ஓவர் ஆசிய கோப்பையில் இலங்கை அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை அணி இந்த ஆண்டு நடந்த சில தொடர்களில் வெற்றியை எட்டாத நிலையில் இந்த ஆட்டத்தை எதிர்கொள்கிறது. அதேபோல், வங்கதேசமும் உள்நாட்டில் நடைபெற்ற இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் உடனான ஒருநாள் போட்டியில் தோல்வி கண்டுள்ளது. எனவே இரு அணிகளும் தங்களது கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள். பி பிரிவில் நடைபெறும் முதல் ஆட்டம் இது. மேலும், இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

 

 

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Story

“மனைவியின் உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம்” - இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Imran Khan sensational allegation on Poison is mixed in wife's food

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில், தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஜனவரி 30ஆம் தேதி இம்ரான் கானிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

அதே வேளையில், இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக திருமணம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஸ்ரா பீவிக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, புஸ்ரா பீவி, இஸ்லாமாபாத்தில் உள்ள பாணி காலா இல்லத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில், தனது புஸ்ரா பீவிக்கு, உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவும் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஊழல் வழக்கு தொடர்பான வழக்கில் ஆஜரான இம்ரான்கான், ‘தனது மனைவிக்கு உணவில் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் கலந்து கொடுக்கப்படுகிறது. மேலும், அவருக்கு கொடுக்கப்படும் விஷம் கலந்த கலந்த உணவினால், அவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரது உடல்நிலையும் மிகவும் நலிவடைந்து வருகிறது.

அதனால், இஸ்லாமாபாத்தில் உள்ள சர்வதேச மருத்துவமனையில் தனது மனைவியின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்’ எனக் கூறினார். இதையடுத்து, அடுத்த 2 நாட்களில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.