Skip to main content

ரோஹித்தை தொடர்ந்து ராயுடு சதம்...

Published on 29/10/2018 | Edited on 29/10/2018

 

இன்று நடைபெறும் இந்திய மேற்கிந்திய தீவுகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸை வெறு முதலில் பேட்டிங் ஆடி வருகிறது. இதில் இந்திய அணியின் வீரர்களான சிஹர் தவான் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அவுட் ஆகியுள்ளனர். தொடக்க வீரராக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார். அப்போது இந்திய அணி 32.3 ஓவருக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் பெற்றிருந்தது.

பின்னர், அதிரடியாக விளையாடிய ரோஹித் 162 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இவருடன் நிதானமாக விளையாடி வந்த அம்பதி ராயுடு தற்போது சதம் அடித்துள்ளார். 80 பந்துகளில் எட்டு பவுண்டரிகள், நான்கு சிக்ஸர்கள் அடித்து சதத்தை பெற்றுள்ளார்.