Skip to main content

கங்குலி தான் பெஸ்ட்... தோனி நெக்ஸ்ட்தான்...

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

2000-ஆம் ஆண்டுகளில் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு கிரிக்கெட்டை ஆட்டிப்படைத்தது. பல அதிர்ச்சியான நிகழ்வுகளால் சில கிரிக்கெட் அணிகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதில் இந்திய அணியும் ஒன்று. பல மாற்றங்களை செய்ய வேண்டிய நிலையில் இருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

 

sourav gaguly

 

புதிதாக அணியை கட்டமைக்க வேண்டிய சூழ்நிலையிலும், பல கடினமான தொடர்களை சந்திக்க வேண்டிய நிலையிலும் இந்திய அணிக்கு தலைமையேற்க கங்குலி என்னும் அசாத்திய திறமை கொண்ட ஒரு லீடர் கிடைத்தார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அது மிகப்பெரிய திருப்புமுனை.
 

“வீட்டுல புலி; வெளில எலி” என்பதைப் போல சொந்த மண்ணில் வெளுத்துக் கட்டும் பல கிரிக்கெட் அணிகள், வெளிநாடுகளில் மண்ணைக்கவ்வி கொண்டு திரும்பி வரும். இந்த லிஸ்டில் இந்திய அணியும் விதிவிலக்கு இல்லை. 1990-களில் வெளிநாடுகளில் இந்திய அணியின் செயல்பாடு ஒரு சில தொடர்களில் ஓரளவு இருந்தாலும், பெரும்பாலான தொடர்களில் மிகவும் மோசமாகவே இருந்துவந்தது. அந்த மோசமான வரலாற்றை கங்குலி தலைமையின்கீழ் மாறத் துவங்கியது. 
 

பல திறமையான வீரர்களைக் கொண்டிருந்தாலும் இந்திய கிரிக்கெட் அணி, 1990-2000 காலகட்டங்களில் பல தொடர்களில் மிகவும் மோசமான தோல்விகளை அடைந்துவந்தது. அதற்கு பிறகு பொறுப்பேற்ற கங்குலி பல மாற்றங்களை கொண்டுவந்தார். போராடும் குணத்தையும், எந்த நாட்டிலும் எந்த போட்டியிலும் நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கினார். வீரர்களின் தனிப்பட்ட திறமையை அறிந்து அதற்கேற்ப அவர்களை பயன்படுத்தினார். வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் போன்ற பல உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கிரிக்கெட்டிற்கு அடையாளப்படுத்தினார்.
 

பின்னர் கேப்டன் தோனி இந்தியாவை ஒரு பெரும் சக்தியாக உருவாக்கினார். கங்குலியின் வேலையை சிறப்பாக தொடர்ந்து செய்தார். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற முடியும் என்ற அணுகுமுறையுடன் அனைத்து போட்டிகளிலும் களம் கண்டார். பல கோப்பைகளை வென்று சிறந்த கேப்டனாக உருவெடுத்தார். பின்னர் வந்த கோலி தோனியின் வேலைகளை தொடர்ந்த போதிலும் பல இடங்களில் ஆக்ரோஷமாக இந்திய அணியை வழிநடத்தினார். 
 

கோலியின் அணி எந்த போட்டியையும் இழக்க விரும்புவில்லை. ஒவ்வொரு தொடரிலும், ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் களம் கண்டு வருகிறது. விராட் கோலி பதவியேற்று சிறிது காலம்தான் ஆகியுள்ளது என்றாலும், அவரின் ஆக்ரோஷமான அணுகுமுறையும், அவரது அணி வீரர்களின் விடாமுயற்சியும் முன்னாள் இருந்த இந்திய அணிகளுக்கு ஈடு செய்யும் வகையில் உள்ளது. 

 

yuvaraj

 

அனைத்து கேப்டன்களுமே அந்தந்த காலகட்டங்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர் என்பதே உண்மை. இந்த நிலையில் சிறந்த கேப்டன்களை வரிசைப்படுத்திய போது கங்குலி, தோனி என்ற வரிசையில் சேவாக் கூறியுள்ளார். சவுரவ் கங்குலி தான் நம்பர் 1 கேப்டன். தனது அணி வீரர்களிடமிருந்து 100% திறமையை வெளிக்கொண்டு வருவது மற்றும் அவர்களின் திறமையை அறிந்து செயல்படுபவரே சிறந்த தலைவர் என சேவாக் கூறியுள்ளார். 
 

ஒரு சிறந்த இந்திய அணியை கட்டமைக்க கங்குலி கேப்டனாக பெரிதும் உதவியுள்ளார். கங்குலி தலைமையில் இந்தியாவில் மட்டுமல்லாது; வெளிநாடுகளிலும் இந்திய அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது. பல கேப்டன்களை ஒப்பிடுகையில், தனிப்பட்ட பாணியில் கங்குலி மிகவும் சிறந்தவர் என்று சேவாக் கூறினார். 
 

கங்குலி மற்றும் தோனி ஆகியோரின் தலைமையில் இரண்டு உலகக் கோப்பை தொடரில் சேவாக் விளையாடியுள்ளார். தோனி தலைமையில் இறுதிப்போட்டியில் வென்ற அணியிலும், கங்குலி தலைமையில் இறுதிப்போட்டியில் விளையாடிய அணியிலும் இடம்பெற்றவர் சேவாக்.

 

 

 

 

Next Story

ஐபிஎல்-இல் தோனி மட்டுமே செய்த புதிய சாதனை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A new record that only Dhoni has achieved in IPL

ஐபிஎல்-இல் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி மற்றுமொரு புதிய சாதனையை லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நிகழ்த்தியுள்ளார்.

ஐபிஎல்2024 இன் 31 ஆவது ஆட்டம் லக்னோவில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய சென்னை அணி லக்னோ அணியின் சிறப்பான பந்து வீச்சால் 90 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா பொறுப்புடன் ஆடினார். அரைசதம் கடந்த ஜடேஜா 57 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். அவருக்கு மொயீன் அலி 30 ரன்கள், தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து கை கொடுக்க 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய க்ருனால் பாண்டியா 3 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய லக்னோ அணிக்கு டி காக், ராகுல் இணை சிறப்பான துவக்கம் தந்தது. இருவரும் அரை சதம் கடந்து முத்ல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தனர். டி காக் 54 ரன்களும், ராகுல் 82 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பூரன் 23, ஸ்டாய்னிஸ் 8 ரன்கள் என எளிதில் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 19 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தில் நீடிக்கிறது. சென்னை அணி ரன்ரேட் அடிப்படையில் 8 புள்ளிகளுடன் 3 ஆவதி இடத்தில் உள்ளது. ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியில் 9 பந்துகளில் 28 ரன்கள் எடுத்ததன் மூலம் ஐபிஎல் இல் 5000 ரன்களைக் கடந்தார். மேலும் ஒரு விக்கெட் கீப்பராக ஐபிஎல் - இல் 5000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக தினேஷ் கார்த்திக் 4369 ரன்களுடனும், உத்தப்பா 3011 ரன்களுடனும் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளனர். 
 
- வெ.அருண்குமார்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.