Skip to main content

உக்ரைன் அதிபரின் மனைவிக்கு கரோனா தொற்று!

Published on 13/06/2020 | Edited on 13/06/2020

 

g


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 77 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. 
 


கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டாலும் பல்வேறு இடங்களிலும் கரோனா தொற்று பரவி வருகின்றது. இதன் உச்சகட்டமாக பிரிட்டன் பிரதமர் வரை கரோனா தொற்று பரவி இருக்கின்றது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் அதிபரின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உக்கரைன் நாட்டின் அதிபராக இருப்பவர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி. இவருடைய மனைவி ஓலேனா. இவருக்குக் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. கரோனா தொற்று இருக்குமோ என்று அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்