Skip to main content

நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்த மக்கள்... ரகசிய இடத்தில் கனடா பிரதமர்!

Published on 30/01/2022 | Edited on 30/01/2022

 

People who went on strike ... Prime Minister of Canada in a secret place!

 

கரோனா தடுப்பூசிக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் போராட்டம் வலுத்து வருவதால், அந்நாட்டு பிரதமர் ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

கனடா நாட்டில் கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, பல்வேறு இடங்களுக்கு செல்பவர்களுக்கு தடுப்பூசிக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் போராட்டம் வலுத்து வருகிறது. சரக்கு வாகனங்கள் மூலமாக பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள், நாடாளுமன்றத்தை சுற்றி வளைத்தனர். மேலும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். 

 

இன்னும் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பத்திரமாக ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தைப் போலவே கனடாவிலும் அமல்படுத்தப்பட்ட திட்டம்; குவியும் பாராட்டுகள்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Similar to Tamil Nadu, Canada also provides breakfast to students

கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு தேசிய பள்ளி உணவு திட்டத்தை அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிமுகப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”குழந்தைகள் நன்கு கற்க வேண்டும் என்றால், முதலில் அவர்கள் வயிறார சாப்பிட்டுவிட்டு வகுப்பறைக்குச் செல்லவேண்டும். கனடாவின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் ஒவ்வொரு மாணவரும் அவர்களின் கற்றல் திறனை சிறந்த முறையில் மேம்படுத்த இது பெரிதளவில் உதவும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

கனடாவில் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் தேசிய பள்ளி உணவுத் திட்டம் சேர்க்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டிருந்தார். அதன்படி அரசாங்கத்தின் பட்ஜெட் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் அமைச்சர் ஜென்னா சுட்ஸ் ஆகியோருடன் ஜஸ்டின் ட்ரூடோ 2 ஆம் தேதி டொராண்டோவில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு நான்கு லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தத் தேசிய உணவு திட்டத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1 பில்லியன் டாலர் செலவழிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பள்ளிக் கல்வியானது கூட்டாட்சி அதிகார வரம்பிற்குள் வரவில்லை என்றாலும், மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் கூட்டு சேர்வதற்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கனடா அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மேம்படவும், அவர்கள் கற்றுக்கொள்ளவும், வளரவும், அவர்களின் முழு திறனை அடையவும் இந்த மதிய உணவு திட்டம் உதவுகிறது. இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கான ஒரு தலைமுறை முதலீடாகும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களுக்குத் தேவையான உணவு இருப்பதை உறுதிசெய்ய, மாகாணங்கள் மற்றும் பிரதேசங்கள் மற்றும் பழங்குடியின மக்களுடன் இணைந்து பணியாற்றப் போகிறோம். குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் ஒரு பாதுகாப்பு வலையாக இருக்கும். உணவுக்கான அணுகல் பற்றாக்குறை குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் இன மற்றும் பழங்குடி சமூகங்களின் குழந்தைகளை விகிதாச்சாரமாக பாதிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம், வளரும் குழந்தைகளின் தட்டுகளில் ஆரோக்கியமான உணவு கிடைக்கும்.

Similar to Tamil Nadu, Canada also provides breakfast to students

புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம், மாகாணங்கள், பிரதேசங்கள் மற்றும் பழங்குடியினர் தங்கள் தற்போதைய பள்ளி உணவுத் திட்டங்களை விரிவுபடுத்தவும், நாடு முழுவதும் அதிகமான குழந்தைகள் தங்களுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவை அனுபவிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தவும் உதவும். இந்தத் திட்டம் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்லது, பொருளாதாரத்திற்கும் நல்லது. இது குழந்தைகளின் உடல்நலம், கல்வி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் அதே வேளையில், குடும்பங்களின் அழுத்தத்தைக் குறைத்து, நமது குழந்தைகளின் எதிர்காலத்தில் நேரடியாக முதலீடு செய்ய உதவும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறமிருக்க, கடந்த ஆண்டு, பிரிட்டிஷ் கொலம்பியா, மனிடோபா மற்றும் நோவா ஸ்கோடியா ஆகிய நாடுகளில் உள்ள பள்ளிகளிலும் மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  கனடா அரசாங்கம் நீண்ட காலமாக இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு திட்டமிட்டு வந்தது. அதன்படி, இந்தத் திட்டம் தற்போது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கனடா மட்டுமல்லாமல் பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இந்தச் செய்தியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அதில், இது போன்று உணவு திட்டங்கள் கொண்டு வருவதில் இந்தியாவிற்கு மட்டுமல்லாது உலகிற்கே தமிழ்நாடு முன் மாதிரி என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், சிலர் திராவிட மாடல் என்பது இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் பாலோ செய்ய மட்டும் அல்ல. உலகிற்கே வழி காட்டுவது எனவும் பதிவிட்டு வருகின்றனர். தமிழகத்தில் மதிய உணவு மட்டுமல்லாது காலை உணவும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

பாகிஸ்தானில் புதிய பிரதமர் பதவியேற்பு!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
New Prime Minister sworn in in Pakistan!

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-என் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. இதனிடையே, பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கானுக்கு, 30 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், அவரது மனைவி புஷ்ரா பிபிக்கும் இந்த வழக்குகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. மேலும், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு தேர்தலில் போட்டியிடத் தடை விதித்திருந்தது. இதனால், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகப் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 265 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 133 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்கலாம். இந்தத் தேர்தலில் தெக்ரீக் - இ - இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் ஆதரவு சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றனர். அதேபோன்று, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 75 இடங்களைக் கைப்பற்றியது. பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளைக் கைப்பற்றியது. இருப்பினும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

அதே சமயம் தேர்தல் நடந்து நாட்கள் கடந்த பிறகும் புதிய அரசை அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இத்தகைய சூழலில் தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியும், பிலாவல் புட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அதன்படி நவாஷ் ஷெரீபின் சகோதரரும் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் 33வது பிரதமராக இன்று பதவியேற்றுள்ளார்.