Skip to main content

காதலியின் தொல்லை தாங்காமல் திருடிவிட்டு சிறைக்கு சென்ற இளைஞர்!

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

சீனாவில் காதலியின் தொல்லை தாங்காமல் இளைஞர் ஒருவர் திருடிவிட்டு சிறைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மாங்கோ மாகாணத்தை சேர்ந்தவர் சென். 28 வயது இளைஞரான அவர் மரியா என்ற பெண்ணை மூன்றாண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளுமாறு சென்-யை அவர் வற்புறுத்தியுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை வந்துள்ளது.



இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மரியா வற்புறுத்தவே, இதனால் அதிருப்தி அடைந்த சென் இதில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்துள்ளார். அருகில் இருந்த எலட்ரானிக் கடைக்கு என்ற அவர் அங்கிருந்த விலையுர்ந்த ஸ்பீக்கர் ஒன்றை திருடியுள்ளார். பொருளை எடுத்துக்கொண்டு ஓடும்போது அங்கிருந்த காவலாளி அவரை பிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர். மரியாவிடம் இருந்து தப்பிக்கவே திருடியதாக சென் போலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்