Skip to main content

எச்சரிக்கை பலகையை மீறிய இளைஞர்கள்; ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு 

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

young man trapped river passes away

 

திருச்சி மாவட்டம் துறையூர் பச்சமலை பகுதியில் உள்ள கோரையாற்றில் நேற்று(26.5.2022) குளிக்க சென்றவர்களில் ஒருவா் பாறையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சோ்ந்த முகுந்தன்(35) கப்பலில் மரைன் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இன்னும் 6 மாதத்தில் பணி உயர்வு வழங்கப்பட உள்ள நிலையில், விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார். 

 

இதையடுத்து பெரம்பலூரை சேர்ந்த தன்னுடைய நண்பர்கள் சாஜித்கான்(20), ஷாஜகான்(21) ஆகிய இருவரோடும் சோ்ந்து கோரையாற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததையும் மீறி அப்பகுதியில் குளிக்க சென்றுள்ளனா். நேற்று(26.5.2022) மதியம் குளிக்க சென்ற நிலையில் எதிர்பாராதவிதமாக கோரையாற்றில் திடீர் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் இருவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு, பின்பு செடி கொடிகளை பிடித்து கரையேறி உள்ளனர். ஆனால் முகுந்தன் வெள்ளத்தில் சிக்கி பாறை இடுக்கில் மாட்டியதால் தண்ணீரில் இருந்து வெளியே வர முடியாமல் மூச்சு திணறி இறந்துள்ளார்.

 

இந்நிலையில் தண்ணீர் வடிந்த பிறகே அவா் ஆற்றில் சிக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து துறையூர் வனத்துறையினா் ரஞ்சித் தலைமையிலான 7 போ் கொண்ட குழு முகுந்தனை போராடி மீட்டனா். அதன் பிறகு உடலை வனத்துறையினரிடம் இருந்து பெற்று துறையூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனா். வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டும் அதையும் மீறி குளிக்க செல்வதால் தொடா்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. கடந்த மாதமும் இதேபோல் காட்டாற்று வெள்ளத்தில் ஒரு இளைஞா் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.