Skip to main content

நீ இன்னைக்குத் தான் வந்திருக்க... வங்கி காசாளர் மீது மனைவி கொடுத்த புகார்... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

இளம்பெண் கொடுத்த அந்த புகைப்படங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதன், "ஏன் இதை தீவிரமாக விசாரிக்கவில்லை' என்று காவல்துறையை எச்சரித்தார். பின்னர், அந்த புகைப்படங்களை எடுத்த வங்கி அதிகாரி எட்வின் ஜெயக்குமாரின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தார். மேலும், 24 மணி நேரத்திற்குள் எட்வின் ஜெயக்குமாரை கைதுசெய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

புகைப்பட ஆதாரங்கள் மூலம் ஜெயக்குமாரின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்து, அவரை கைதுசெய்யக் காரணமான அந்த இளம்பெண் ஜெயக்குமாரின் மனைவி என்று தெரியவந்தது. அவரிடம் இது குறித்து நாம் விசாரித்தபோது, நான் தஞ்சாவூரைச் சேர்ந்தவள். கடந்த டிசம்பர் மாதம் எனக்கு திருமணம் நடந்துச்சு. கணவர் எட்வின் ஜெயக்குமார் விராலிமலையில் உள்ள வங்கியில் காசாளராக இருக்கிறார்.

 

incident



கல்யாணம் ஆன அடுத்த சிலநாளில், ரீட்டா என்பவரை தனது தூரத்து உறவுக்காரப் பெண் என்று அழைத்து வந்து, "இவர் இனி இந்த வீட்டில்தான் தங்குவார்' என்றும் கணவர் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்துச்சு.

அதுமட்டுமல்லாம, வீட்டுக்கு லேட்டாக நடுராத்தியில வருவார். அதுக்குப்பிறகும் செல்போனில் தொடர்ச்சியா பேசிக்கிட்டேயிருப்பார். ஒருநாள் எதேச்சையாக அவருடைய செல்போனை பார்த்தபோது, அவருடைய நிர்வாணப் படங்களையும் பெண்களுடன் அவர் நிர்வாணமா இருக்கும் படங்களையும் பார்த்தேன்.

அவர் வேலைக்குப் போனபிறகு, வீட்டிலிருந்த பீரோவில் பார்த்தபோது 15-க்கும் மேற்பட்ட செல்போன்கள் இருந்துச்சு. அதில், வங்கிக்கு வரும் பெண்களை விதவிதமாக அவர் படமெடுத்து இருப்பதையும், அந்த ஏரியா பெண்களுடன் அசிங்கமாக படம் எடுத்திருப்பதையும் பார்த்து நொந்துபோயிட்டேன். பல பெண்களுடன் அசிங்கமாக வாட்ஸ் ஆப்பில் சாட்டிங் செய்துள்ளதையும் பார்த்தேன். சில பெண்களுக்கு அசிங்கமாக குறுஞ்செய்திகளும் வீடியோக்களும் அனுப்பியிருந்தார்.

அதில், தேவிபிலோமினாள் என்ற பெண்ணுக்கு போன் போட்டு, "ஏன் இப்படி என் புருஷனிடம் பேசுற, இது அசிங்கம் இல்லையா?'ன்னு கேட்டேன். அதுக்கு அவ சிரிச்சுகிட்டு, "நான் மட்டும் இல்ல... உன் புருஷனோட நிறைய பெண்களுக்கு தொடர்பு இருக்கு. அவரு எங்களை விட்டுப் பிரிந்து போகமாட்டாரு. நீ இன்னைக்குத் தான் வந்திருக்க. நான் பலமுறை நீ இருக்குற வீட்டுக்கு வந்திருக்கேன். இதை பெரிசுபடுத்தாம இருந்தா உனக்கு நல்லது'ன்னு சொன்னபோது எனக்கு தலையே சுற்றியது.

புவனா என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தில் அவர் கர்ப்பமடைந்த விபரமும், அதை கலைக்க சொல்லி என் கணவர் கட்டாயப்படுத்திய வாட்ஸ்அப் தகவல்களும் இருந்துச்சு.


வங்கியில் பணம் செலுத்த வரும் பெண்களை குறிவைத்து அவர்களை வசியப்படுத்துவதற்காகத் தான் காசாளர் பணியிலிருந்து உயர் பதவிக்கு மாறாமல் இருக்கிறார் என்பது தெரிந்தது. ஞானரோசி, விமலா, லட்சுமி, தமிழ்ச்செல்வி, மரியா, சிட்டு, அகிலா என பல பெண்கள் என் கணவருடன் தொடர்பில் இருக்குறாங்க.

என் வீட்டுக்கு அருகே இருக்கும் பெண்களையும் ஆபாசமா படம் எடுத்து வச்சிருக்கிறார்.

இந்த வீடியோ, போட்டோக்கள் பற்றி அவரிடம் கேட்டபோது, "நான் இப்படித்தான் இருப்பேன். அவுங்க என்னுடைய தோழிகள். நான் என் இஷ்டத்துக்குதான் நடப்பேன். இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொன்னா உன்னை கொலை செய்துடுவேன். உனக்குத் தெரியாமல் உன்னையே நான் படம் எடுத்து வச்சிருக்கிறேன். நீ குளிக்கும்போது உனக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வச்சிருக்கிறேன். என்னைப் பற்றி ஏதாவது பேசினா அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன்' என மிரட்டிக்கிட்டே இருந்தார்.

ஒரு பக்கம் இப்படி கணவனின் வக்கிரமான செயல், இன்னொரு பக்கம் மாமியார், நாத்தனார் வரதட்சணைக் கொடுமை இரண்டு பக்கமும் கொடுக்கும் டார்ச்சரால் நரக வேதனையை அனுபவித்தேன்.


இப்படிப்பட்ட சூழ்நிலையில, யாருமில்லாத மலைப்பகுதிக்கு என்னை அழைச்சிக்கிட்டு போனார். உயிருக்கு ஆபத்துன்னு மனசுக்குப் பட்டதால அங்கிருந்து தப்பிச்சு என் அம்மா வீட்டிற்கு வந்துட்டேன்.

அம்மா, அப்பாவுடன் தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதனிடம் புகார் கொடுத்தேன். அவர் வல்லம் மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அனுப்பி விசாரித்து, அவர் மீது 498, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். இதற்குப் பயந்துதான் முன்ஜாமீன் கேட்டார். அதுக்கு எதிராக நான் மனு போட்டு, அவரை உள்ளே தள்ளினேன்' என்றார் ஆத்திரமும் அழுகையுமாக.

இதுகுறித்து வங்கி வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது, "அவர் மேல நிறைய புகார் இருக்கு. விராலிமலை காவல் நிலையத்தில் செமத்தியா வாங்கியிருக்கிறார். ஆனால் அதையெல்லாம் சரிக்கட்டி வெளியே வந்துவிட்டார்'' என்கிறார்கள்.

-ஜெ.தாவீதுராஜ்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.