Skip to main content

கல்லணை கால்வாயில் ஷட்டர் சுவா் உடைந்து கொட்டியதால் பரபரப்பு!!

Published on 06/07/2020 | Edited on 06/07/2020
kallanai

 

கல்லணை கால்வாயில் பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைமடை பாசனப்பகுதிகளில் ஓடி ஏரி, குளங்களை நிரப்பி கடைசியில் நாகுடி மும்பாலை ஏரியில் தனது ஓட்டத்தை முடித்துக் கொள்கிறது.

கடந்த மாதம் 12 ந் தேதி மேட்டூரில் முதலமைச்சர் திறந்துவிட்ட தண்ணீர் 16 ந் தேதி கல்லணையில் இருந்து திறந்த தண்ணீர், புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் 20 ந் தேதி வந்து 21 ந் தேதி மேற்பனைக்காடு – வேம்பங்குடிக்கு இடையே பெரிய உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வயல்களில் பாய்ந்து ஓடியது. சுமார் 15 மணி நேரம் விவசாயிகளும், ஒப்பந்த ஊழியர்கள் போராடி உடைப்பை சரி செய்தனர். தொடர்ந்து அடுத்த நாள் முழுமையாக சீரமைக்கப்பட்டது. அதன் பிறகு தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு கடந்த சில நாட்களாக தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் தண்ணீர் வந்தபோது, மேற்பனைக்காடு வான்வழி செய்தி மையம் அருகே ஆயிங்குடி பொதுப்பணித்துறை கட்டப்பாட்டில் உள்ள சுமார் 300 ஏக்கர் பாசனம் உள்ள ஜெகநாதன் ஏரிக்கு தண்ணீர் செல்லும் ஷட்டர் சுவர்கள் உடைந்து கால்வாயில் தண்ணீரில் கொட்டியது. இதனால் ஏரிக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. மேலும் சுவர் உடைந்திருப்பதால் இரவு நேரத்தில் தண்ணீர் அதிகமாக வரும்போது, கரையில் அறிப்பு ஏற்பட்டு உடைந்துவிடுமோ என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது.

பல வருடங்களாக உடைந்து சேதமடைந்திருந்த ஷட்டர் சுவரை சீரமைக்காத கல்லணைக் கோட்ட அதிகாரிகள் தற்போது உடைந்த பிறகும் சீரமைப்பை தாமதம் செய்து வருகின்றனர். அதிகாரிகள் விரைந்து செயல்பட்டால் ஆபத்துகளை தடுக்கலாம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.