Skip to main content

அரசுப்பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோவில் கைது

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

 

women incident youth arrested police dharmapuri district

 

தர்மபுரி அருகே அரசுப்பள்ளி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

 

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தந்தை நடத்தி வரும் உணவகத்தில் பிரபு (வயது 25) என்ற வாலிபர் 6 மாதம் வேலை செய்துவந்தார். கடந்த ஆண்டு அவர் திடீரென்று வேலையை விட்டு நின்றுவிட்டார். 

 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி, மாணவியின் தாய் கர்ப்பப்பைச் சிகிச்சைக்காக கோபிநாதம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, வீட்டில் தனியாக இருந்த மாணவி கடைக்குச் செல்வதற்காக வெளியே வந்தபோது, அங்கு வந்த பிரபு அவருக்கு ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடன் அழைத்துள்ளார். அதற்கு வர மறுத்த மாணவி, வீட்டிற்குள் சென்றுள்ளார். 

 

அப்போது அவரைப் பின்தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற பிரபு, மாணவியைக் கட்டாயப்படுத்தித் தன்னுடைய மோட்டார் சைக்கிளில் அமர வைத்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அவர் தற்போது 5 மாத கர்ப்பமாக உள்ளார். 

 

இந்தச் சம்பவம் குறித்து வீட்டில் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல் மாணவியும் மறைத்து வந்துள்ளார். ஆனால், அவருடைய வயிறு பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது. இதனால்  சந்தேகம் அடைந்த பெற்றோர், சில நாள்களுக்கு முன்பு அவரிடம்  விசாரித்துள்ளனர். 

 

அப்போதுதான் அந்த மாணவி, பிரபு தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டார் என்றும், தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை தர்மபுரி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். 

 

மேலும், இதுகுறித்து அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், ஆய்வாளர் லதா, சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை (ஜன.16) அவரைக் கைது செய்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மனைவி கண்முன்னே பாலியல் வன்கொடுமை; திருமணமான பெண்ணின் பரபரப்பு புகார்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
A married woman's sensational complaint on Incident happened in front of wife

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.