Skip to main content

கூட்டுப் பாலியல் வன்கொடுமை; முகத்தில் சிறுநீர் கழித்தும் ஆபாச வீடியோ எடுத்தும் சித்திரவதை!

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

 woman has filed a police complaint against three people Dharmapuri

 

தர்மபுரி அருகே, பெண் கட்டடத் தொழிலாளி ஒருவரை மூன்று பேர் சேர்ந்து இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள வண்ணாத்திப்பட்டியைச் சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தர்மபுரி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். 

 

புகார் குறித்து அந்தப் பெண் கூறியது:  எனக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக நானும் என் கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். குழந்தைகள் கணவருடன் வசிக்கின்றனர். நான் கட்டட வேலைக்குச் சென்று பிழைத்து வருகிறேன். பென்னாகரம் ரங்காபுரம் காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி முருகன்.  இவருடன் கட்டட வேலைக்குச் சென்று வந்ததில் எங்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்ட அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னை கட்டாயப்படுத்தி  பலமுறை பாலியல் பாலத்காரம் செய்துள்ளார்.  பென்னாகரம், மாங்கரை, மோட்டுப்பட்டி, குட்டம்பட்டி, வண்ணாத்திப்பட்டி, கரியம்பட்டி, காட்டுக்கொல்லை ஆகிய இடங்களுக்கு  முருகனுடன் கட்டட வேலைக்குச் சென்ற போதெல்லாம் 150க்கும் மேற்பட்ட முறை என்ன பலவந்தப்படுத்தி உறவு கொண்டுள்ளார். அவர் எனக்குத் தெரியாமல் அலைபேசியில் என்னை ஆபாசமாக வீடியோ படம் எடுத்து வைத்துக் கொண்டார். அதன்பிறகு, அந்த வீடியோவை  சமூக ஊடகங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே என்னை மேலும் சீரழித்தார்.  

 

இதுமட்டுமின்றி அவ்வப்போது பணமும் கேட்டு மிரட்டி வந்தார். இதனால் வேறு வழியின்றி நான், எனக்குத் தெரிந்த பலரிடம் கடன் வாங்கி இதுவரை முருகனிடம் 3 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறேன். நான் ஆடையில்லாமல் இருப்பது போன்ற 15க்கும் மேற்பட்ட வீடியோக்களை எடுத்து வைத்திருக்கிறார்.  முருகன் மட்டுமின்றி, அவருடைய கூட்டாளியான மேஸ்திரி காளியப்பன், மேஸ்திரி கணேசன் ஆகியோரும் என்னை மிரட்டி பலமுறை  பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த 6 மாதத்திற்கு முன்பு இவர்கள் மூன்று பேரும் இரவு நேரத்தில் என் வீட்டிற்குள் புகுந்து என்னை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அப்போது குடிபோதையில் இருந்த அவர்கள் என் கை, கால்களை கட்டிப்போட்டும் வாயை துணியால் அடைத்து வைத்தும் சித்திரவதை செய்தனர். அவர்கள் என் மீது சிறுநீர் கழித்தனர். இதையெல்லாம் வெளியே யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டினர். நானும் உயிருக்குப் பயந்து யாரிடமும் புகார் அளிக்கவில்லை.     

 

இவர்களின் கொடுமை தாங்க முடியாததால் வண்ணாத்திப்பட்டியில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு, மாரண்டஅள்ளிக்குச் சென்றுவிட்டேன். இவர்களுக்கு மாதேஸ் என்பவர் உடந்தையாக இருக்கிறார். எனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து ஏற்கனவே பென்னாகரம் காவல்நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னிடம் மட்டும் விசாரித்துவிட்டு புகாரை கிடப்பில் போட்டுவிட்டனர். என்னிடம் விசாரணை நடத்திய காவலர்களில் ஒருவர், நீ அழகாகத்தானே இருக்கிறாய்... தினமும் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாமே என அருவருக்கத்தக்க வகையில் பேசினார். அந்தக் காவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கூறினார். இந்தப் புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுப்பாலியல் விவகாரம் மாரண்டஅள்ளி பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.