Skip to main content

கடன் கொடுத்தது கலெக்டர் இல்ல நான் பணத்தை கட்டு-தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது பெண் புகார்

Published on 27/12/2018 | Edited on 27/12/2018

ஆட்சியர் உத்தரவை மதிக்காமல் வசூலுக்கு வந்து மிரட்டிய தனியார் நிதி நிறுவன மேலாளர் மீது காவல் நிலையத்தில் சுயஉதவிக்குழு பெண் புகார் அளித்துள்ளார்.

 

புயலால் பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனங்கள் சுயஉதவிக்குழு கடன் தவனை செலுத்த 6 மாதகாலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட பிறகும் நிதி நிறுவன ஊழியர்கள் வசூலுக்கு வந்து மிரட்டுவதாக குளமங்கலத்தைச் சுயஉதவிக்குழு பெண் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் பரபரப்பு எற்பட்டுள்ளது.  

 

case

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்கள் கஜா புயலால் அதிகமாக பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்து விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து நிர்கதியாக நிற்கின்றனர். இந்த நிலையில் சுயஉதவிக்குழு பெண்களுக்கு கடன் கொடுத்த தனியார் நிதிநிறுவனங்கள் தவனைத்தொகையை வட்டியுடன் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

 

இந்தநிலையில் புயலால் விவசாயம் மற்றும் சிறு தொழில்களும் அழிந்துவிட்டது. அப்படியான நிலையில் வாழ்க்கை நடத்தவே சிரமமாக உள்ளதால் சுயஉதவிக்குழு கடன்களுக்கு கால நீடிப்பு செய்ய வேண்டும் என்று சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷிடம் மனு கொடுத்தனர். அதன் பிறகு 6 மாத காலம் வரை தவனை தொகை கட்ட வேண்டாம் என்று கலெக்டர் கூறினார். அதன் பிறகும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வசூலுக்கு கிராமங்களுக்கு சென்று வருகின்றனர். 

 

 

அதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்த குமரசாமி மனைவி சின்னபொண்ணு (வயது 55) கீரமங்கலம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அறந்தாங்கியில் இயங்கிவரும் தனியார் நிதிநிறுவனத்தில் கடன் வாங்கி தவனை தவறாமல் திருப்பி செலுத்தி வருகிறேன். ஆனால் புயல் பாதிப்பால் தவனை தொகை கட்ட சிரமமாக உள்ளது. அதனால் தவனை தொகை கட்ட முடியவில்லை. இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் 6 மாதங்களுக்கு தவனை தொகை கட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார் என்பதை தவனை வசூலுக்கு வந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் ஆனந்தியிடம் சொன்னால் கடன் கொடுத்தது கலெக்டர் இல்லை நான் கொடுத்தேன் பணத்தை கட்டு என்று தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டினார் என்று புகார் கொடுத்துள்ளார்.

 

 

சின்னப்பொண்ணுவை புகார் கொடுக்க காவல் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்த மாதர் சங்கம் அபிராமி கூறும் போது.. 

 

 

புதுக்கோட்டை போல மற்ற புயல் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சுயஉதவிக்குழு கடன்களுக்கு 6 மாதம் தவனை காலம் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது, அதே போல தான் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரும் உத்தரவிட்டு மனு கொடுக்க சென்ற பெண்களிடம் 6 மாதம் வரை கடன் தவனை கட்ட வேண்டாம் என்று சொன்னார். ஆனால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் தரக்குறைவாக பேசி வசூல் செய்து வருகிறார்கள். இதனால் பல பெண்கள் அவமானம் தாங்க முடியாமல் மறுபடியும் யாரிடமாவது கடன் வாங்கி தவனை கட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இது சம்மந்தமாக மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்ட போதும் கலெக்டர் தனியார் நிதி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, கடன் வசூலுக்கு வரமாட்டார்கள். மீறி வந்தால் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்க சொல்கிறேன் என்று கூறியதால் தான் குளமங்கலத்தில் சின்னப்பொண்ணுவை மிரட்டிய தனியார் நிதி நிறுவன மேலாளர் ஆனந்தி மீது கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறோம் என்றார். 

 

 

மீண்டும் இதே போல மற்ற கிராமங்களிலும் பெண்கள் மிரட்டப்படுவதும், தரக்குறைவாக பேசும் சம்பவங்கள் தொடருமானால் ஜனவரி 2 ந் தேதி இந்த கோரிக்கைளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள சுயஉதவிக்குழு பெண்களை இணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.