Skip to main content

விருதுநகர் வேட்பாளரான கேப்டன் ரசிகர்! -தேமுதிக புதுக்கணக்கு!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019


 
விருதுநகர் மக்களவைத் தொகுதியின் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார் ஆர்.அழகர்சாமி.  மதுரை பழங்காநத்தத்தில் வசிக்கும் அழகர்சாமி (வயது 47) 27 மனை தெலுங்குச்செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.  பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர், திருப்பரங்குன்றத்தில் கழிவு பஞ்சு வியாபாரம் பார்த்து வருகிறார். கோயம்புத்தூரில் இயங்கும் கைட்ஸ் இன்போசர்வீஸ் பிரைவேட் லிமிடெட்டில் பங்குதாரராகவும் இருக்கிறார். இவருக்கு மூன்று மகன்கள். 

 

a

 

1987-ல் விஜயகாந்த் ரசிகர் மன்ற கிளை துணை செயலாளராக இருந்திருக்கிறார். தேமுதிக கட்சி ஆரம்பித்ததும், அக்கட்சியின் திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை செயலாளர் ஆனார்.  மாநகர் கழக துணை செயலாளர், மாநகர் கழக பொருளாளர், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர், மாவட்ட கழக பொருளாளர், கன்னியாகுமரி மாவட்ட கழக பொறுப்பாளர், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் என படிப்படியாக அக்கட்சியில் பொறுப்புக்களை ஏற்று, தற்போது கழக விசாரணைக்குழு உறுப்பினராக இருக்கிறார். 

 

a

 

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் 5 சதவீத வாக்குகளை மட்டுமே வைத்திருக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த அழகர்சாமியை,  மெகா கூட்டணி மீது நம்பிக்கை வைத்து,   துணிச்சலாகக் களமிறக்கியிருக்கிறது தேமுதிக. தொகுதியில் மெஜாரிட்டியாக உள்ள சாதியைச் சேர்ந்தவரை நிறுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று கணக்குப் பார்த்துச் செயல்படும் கட்சிகளுக்கு மத்தியில், வேட்பாளர் தேர்வில் தேமுதிக எடுத்திருக்கும் முடிவு வரவேற்கக்கூடியதே! அதேநேரத்தில், மெஜாரிட்டி அல்லாத பிற சமுதாய வாக்குகளை அழகர்சாமியால் மட்டுமே கவர முடியும் என,  வேறொரு புதுக்கணக்கைக் குஷியாகச் சொல்கின்றனர் தேமுதிகவினர்.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Case against For the Congress candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “விருதுநகர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். இவரின் ஆதரவாளர்கள் தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை வினியோகித்தனர். எனவே மாணிக்கம் தாகூரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஏப்ரல் 14 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று (22.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அவர்களே இது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம்.

இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். மேலும் விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.