Skip to main content

தொழிலதிபர் வீட்டில் கொள்ளை...விவகாரத்தை மறைத்த போலீஸ்!

Published on 08/07/2019 | Edited on 08/07/2019


வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நியுடவுன் பகுதியில் வசிப்பவர் வாணியம்பாடியில் உள்ள பிரபல  ஜவுளிக்கடை அதிபர் வடிவேல். இவரது வீட்டின் பூட்டை ஜூலை 7 ஆம் தேதி இரவு உடைத்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த 92 சவரன் தங்க நகை 25 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஜூலை 8 ஆம் தேதி காலை இதைப் பார்த்து விட்டு வாணியம்பாடி நகர காவல் நிலையத்துக்கு தகவல் கூறியுள்ளனர். இது போன்ற கொள்ளை சம்பவம் நடைபெற்றால் பத்திரிக்கைகளுக்கு தகவல் தருவது வழக்கம். இந்த விவகாரத்தில் பத்திரிக்கை, மீடியாவுக்கு தகவல் சொல்லவில்லை.

 

 

 VELLORE Businessman's house robbed ... THIS ISSUE HIDDEN POLICE

 


இந்நிலையில் ஜூலை 8 ஆம் தேதி மாலை கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார் வருகை தந்தார். அப்போது தான் பத்திரிக்கையாளர்களுக்கு இந்த விவகாரம் தெரிந்து அதிர்ச்சியாகி விட்டனர். கொள்ளை நடந்த வீடு, வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் உள்ளது. இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெளிமாநிலத்தை சேர்ந்த சந்தேகத்துக்கிடமான நபர்கள் சிலரின் நடமாட்டம் இருந்துள்ளது. இதுப்பற்றி போலீசாருக்கு தகவல் சொல்லியும் அவர்கள் கண்டுக்கொள்ளவில்லை. இது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் இருந்தும் காவல்துறையினரின் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.

 

 

 VELLORE Businessman's house robbed ... THIS ISSUE HIDDEN POLICE

 

 


வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி, ஆம்பூர், திருப்பத்தூர் பகுதிகளில் அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன. இது பற்றி காவல்துறையில் புகார் தந்தால் புகாரை வாங்க மறுப்பதும் 100 சவரன் தங்க நகை காணவில்லை என்று புகார் கொடுத்தால் 20 பவுன் என எழுதி தந்தால் தான் வாங்குவோம் என மிரட்டி அவர்கள் சொல்வது போல் புகாரை எழுதி வாங்கி பதிவு செய்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு திருடு நடந்தால் அதுப்பற்றி பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு சொல்லக்கூடாது என மிரட்டியும் உள்ளனர். இந்த தொழிலதிபரையும் அப்படி தான் வாணியம்பாடி காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் டி.எஸ்.பி மிரட்டினார்கள் எனக் கூறப்படுகிறது. திருடர்களுடன் காவல்துறையை சேர்ந்தவர்கள் கூட்டு வைத்திருப்பது மற்றும் மெத்தனமாக செயல்படுவது போன்றவற்றால் தான் திருடுகள் அதிகமாக நடைபெறுகின்றன என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.