Skip to main content

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் வாங்கிய இருவர் கைது

Published on 30/03/2022 | Edited on 30/03/2022

 

Two person arrested taking bribe paddy procurement center

 

கடலூர் மாவட்டத்தில் கோ .பொன்னேரி, சாத்துக்கூடல், தீவளுர் வெண்கரும்பூர், கூடலூர், கொட்டாரம் ,வதிஷ்ட புறம், வையங்குடி ,சிறுப்பாக்கம் ,உட்பட சுமார் 120 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து காரிப் பருவத்திற்கான நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்யும் ஒரு மூட்டை நெல்லுக்கு சராசரி 50 ரூபாய் லஞ்சமாக கறாராக வசூலிக்கப்படுகிறது. எடை போடுவதற்கு ஒரு மூட்டைக்கு 15 ரூபாய் மட்டுமே விவசாயிகள் தர வேண்டும் என்று அரசு நிர்ணயம் செய்து உள்ளது. அதற்கு மேல் யார் கூடுதலாக பணம் கேட்டாலும் உயரதிகாரிகளுக்கு தகவல் அளிக்குமாறு அரசு அறிவித்துள்ளது. ஆனால் நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 40 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விவசாயிகளிடமிருந்து வசூல் செய்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தாலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. 

 

இந்த நிலையில்  சிறுபாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு 50 ரூபாய் என்று விவசாயிகளிடம் வசூல் செய்து கொண்டிருந்தனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் நேற்று(29.2.2022) இரவு லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் சிறுபாக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளைப் போல வந்து மறைந்து நின்றனர். அப்போது கொள்முதல் நிலைய எழுத்தர் ராமச்சந்திரன் லோடுமேன் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் விவசாயிகளிடமிருந்து பணமும் வசூல் செய்ததை கையும் களவுமாக பிடித்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

 

இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாவட்டம் முழுவதும் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில் இதுபோன்று விவசாயிகளிடம் கட்டாயம் லஞ்சமாக பணம் பிடுங்கும் ஊழியர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு எந்த உத்தரவு போட்டாலும் அதை காற்றில் பறக்க விட்டுவிட்டு கையூட்டு வாங்குவதில் மட்டும் கை தேர்ந்தவராக உள்ளனர் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் "என்று தணியும் இவர்களது லஞ்ச தாகம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.