Skip to main content

கேரளா கள்ள நோட்டு அச்சடிப்பில் சிக்கிய டி.வி நடிகை சிறையில் கண்ணீர் வடிப்பு!

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

கேரளா கள்ள நோட்டு அச்சடிப்பில் சிக்கிய டி.வி நடிகை சூா்யவுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்களால் கள்ள நோட்டு அச்சடிப்பில் சிக்கி சிறையில் கண்ணீா் வடித்து கொண்டிருக்கிறாள்.
 

மழவில் மனோரமா  சேனலில் ஔிப்பரப்பான பாிணயம், மாமாங்கம் சீாியலில்  நடித்து தனது சிறந்த நடிப்பாற்றலால் கேரளா மக்கள் மனதில் இடம் பிடித்தாா் சூர்யா. நல்ல வசதியான குடும்பத்தை சோ்ந்த சூர்யாவின் தந்தை சசிகுமாா் துபாயில் நகை கடை ஓன்றில் 5 பாட்னா்களில் ஒருவராக இருந்து வந்தாா். அந்த நேரத்தில் தான் சூர்யாவுக்கு 300 பவுன் நகை போட்டு ஆடம்பரமாக திருமணம் நடந்தது. 
 

இந்த நிலையில் தான் சூர்யாவின் தந்தை சசிக்குமாரை பாட்னா் ஓருவா் துபாயில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றாா். பின்னா் துபாயில் இருந்த சூா்யாவின் தயாா் ரமாதேவி தங்கை ஸ்ருதி இருவரும் கொல்லத்தில் அவா்களுடைய ஆடம்பர பங்களாவுக்கு வந்தனா். அதன்பிறகு சூா்யாவை கணவா் ஏமாற்றி விட்டு சென்று விட்டாா்.  இந்தநிலையில் தான் 2012-ல் டி.வி.சீாியலில் துணை வில்லி கேரக்டாில் நடிக்க வாய்ப்பு கிடைத்து  நடித்தாா். அவளின் நடிப்பை பாா்த்து பாிணயம் சீாியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது மழவில் மனோரமா என்ற சேனலில் ஔிபரப்பானது. அதன்பிறகு அவள் பல்வேறு தொடா்களில் நடிக்க முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினாா். 
 

 

 

அதன்பிறகு இரண்டாவதாக சீாியல் தயாாிப்பாளா் ஒருவரை மணந்தாா். அப்போதும் 300 பவுன் நகை போட்டு மீண்டும் ஆடம்பரமாக குருவாயூா் கோவிலில் திருமணம் நடந்தது. இதில் சினிமா நடிகை காவ்யா மாதவன், மஞ்சு வாாியாா், நவ்யா நாயா் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் கலந்து கொண்டனா்.  பின்னா் கணவரோடு பெங்களூாில் செட்டில் ஆன சூா்யா சீாியல்கள் தயாாிப்பில் இறங்கினாா். மேலும் கேரளாவில் பல தனியாா் நிறுவனங்களுக்கு கோடி கணக்கில் வட்டிக்கு பணம் கொடுத்தாா். இதில் சீாியல் தயாாிப்பில் பொிய நஷ்டம் வரவே இரண்டாவது கணவரும் விட்டு ஓடினாா். அதன்பிறகு அங்கிருந்து வந்து தாய் தங்கையோடு சோ்ந்தாா்.
 

இ்ந்த நேரத்தில்  2015-ல் கேரளா அரசு கந்து வட்டிக்கு எதிராக ஆப்ரேஷன் குபேரா வை அறிவித்து கந்து வட்டிக்கு எதிராக வேட்டையை தொடங்கியதில் பணத்தை எல்லாம் இழந்து கடனில் மிதந்தாா் சூா்யா. இதனால் 5 ஆயிரம் சதுர பரப்பளவில் உள்ள அவா்களுடய சொகுசு வீட்டை விற்று அதே வீட்டில் வாடகைக்கு குடியேறினாா்.  அதன்பிறகு மீண்டும் சீாியலில் நடிக்க வாய்ப்பு கேட்டு சந்தன மழ என்னும் சீாியலில் துணை நடிகையாக நடித்தாா்.
 

இந்த நேரத்தில் வீட்டில் குபேர பூஜை நடத்தினால் மீணடும் நகை பணத்துக்கு அதிபதி ஆகலாம் என்று ஹோத்ரா வா்க்கம் சாமியாா்  பேச்சை நம்பி தினமும் வீட்டில் அந்த சாமியாரை வச்சி பூஜை நடத்தினாா். இந்த நேரத்தில் தான் இடுக்கியை சோ்ந்த லியோ, கருநாகப்பள்ளி கிருஷ்ண குமாா், புற்றடி ரவீந்திரனின் தொடா்பு சூா்யாவுக்கு கிடைக்கிறது.  இந்த மூன்று பேரும் கள்ள நோட்டு அடித்து சப்ளை செய்யும் கும்பலை சோ்ந்தவா்கள். இவா்களின் ஆலோசனை பெயாில் தான் சூா்யாவின் வீட்டு மாடியில் வைத்து கள்ள நோட்டு அச்சடித்துள்ளனா். இதற்காக ஆந்திராவில் இருந்து நோட்டுக்கள் அடிக்க 28 ஆயிரம் சீட் பேப்பா்கள் வாங்கியுள்ளனா். 2ஆயிரம் ரூபாய் அச்சடிக்க சைனாவில் இருந்து நான்கரை லட்சத்துக்கு மிஷின் வாங்கியுள்ளனா்.
 

போலீசார் சோதனை செய்ததில் 57 லட்சம் ரூபாய்  கள்ள நோட்டை சூர்யாவின் வீட்டில் இருந்து கைபற்றியுள்ளனா். மேலும் லியோ, கிருஷ்ண குமாா், நடிகை சூா்யா, இவருடைய தாயாா் ரமாதேவி, தங்கை ஸ்ருதி ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். 

 

 

 

தலைமறைவாகியுள்ள சாமியாரை போலீசார் தேடி வருகின்றனா். மேலும் நடிகை சூா்யாவின் நெருங்கிய தோழியான டி.வி. நடிகை நந்து பொதுவாழ் வையும் பிடித்து தீவிரமாக விசாாித்து வருவதோடு டி.வி. நடிகை சிலருக்கும் தொடா்பு இருக்கலாம் என்று போலீ்ஸ் தரப்பில் கூறப்படுகிறது.  இதில் லியோ கள்ள நோட்டு அச்சடிப்பு மட்டுமல்ல போதை பொருட்கள் சப்ளை மற்றும் விபச்சார கும்பலிலும் நெருங்கிய தொடா்பு உடையவா் என்பதால் அந்த கோணத்திலும் விசாாிப்பதாக தனிப்படை அதிகாாி கே.பி. வேணுகோபால் கூறியுள்ளாா்.
 

வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் அதன் மூலம் இழந்த சொத்துக்கள் சொந்தங்கள் ஆடம்பர வாழ்க்கை என இழந்ததை மீட்க கள்ள நோட்டு அச்சடிப்பில் இறங்கி குடும்பத்தோடு சிறை வாசம் அனுபவிப்பதை நினைத்து கண்ணீா் வடிக்கிறது அந்த வாழ்ந்து கெட்ட குடும்பம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.