Skip to main content

18 வயது நிரம்பாதவர்களுக்கு பெட்ரோல் - டீசல் கிடையாது!

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில், ‘’அன்புள்ள  வாடிக்கையாளர்களே!  நமதூரில் தொடர்ந்து சாலை விபத்துகள் நடந்து வருகின்றன.  முக்கியமாக சிறுவர்களால் அதிகம் விபத்துகள் நடைபெறுகின்றன.

 

ப்

 

விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு எட் காய்ல் ஃப்யூல் சென்டரில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படமாட்டாது என்பதை தெரிவித் துக்கொள்கிறோம்.  தாங்கள் இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்’’என்று எழுதிவைக்கப்பட்டுள்ளது.  

 

ப்

 

விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு இவ்வாறு செய்வதோடு அல்லாமல், பெட்ரோல் போட வருபவர்களிடம் ஓட்டுநர் உரிமம் இருந்தால்தான் பெட்ரோல் போடுகிறார்கள்.   பெட்ரோல் பங்கின் நடவடிக்கை அந்த  பகுதி மக்களிடையே பாராட்டையும், நல்ல மதிப்பையும் பெற்றுள்ளது அந்த பெட்ரோல் நிறுவனம்.


 

சார்ந்த செய்திகள்