Skip to main content

"பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர முன்வர வேண்டும்" -நல்லுசாமி 

Published on 13/05/2023 | Edited on 13/05/2023

 

trichy nallusamy talks about milk consumer increase buying rate 

 

தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவர் நல்லுசாமி நேற்று தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் அதில்  உச்சநீதிமன்றம் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கொடுத்த திருத்தப்பட வேண்டியது. அதற்கு காரணம் கர்நாடக அரசு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு மட்டும் தண்ணீர் விட வேண்டும் என்று கூறி அதில் 284.75 டிஎம்சி தண்ணீர் கர்நாடகாவிற்கும், 177.25டிஎம்சி தண்ணீர் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கும் 21டிஎம்சி தண்ணீர் கேரளாவிற்கும் என்று ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு இதுவரை தமிழகத்தை உபரி நீரை வெளியேற்றும் வாய்க்காலாகவே கருதுகிறதே தவிர. அவர்கள் நமக்கு தண்ணீர் தர வேண்டும் என்ற எண்ணம் இல்லை, எனவே மாதந்தோறும் நீர் பங்கீடு என்பதை, நாள்தோறும் நீர் பங்கீடு கொண்டுவர. வேண்டும். எனவே அதற்கு தமிழக அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

 

அதேபோல் பூரண மதுவிலக்கு குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வரும் அரசியல் தலைவர்கள் கள் பூரண மதுவிலக்கில் உள்ளதா. இல்லையா என்று கூற வேண்டும் கள் ஒரு போதை பானம் என்று சொல்பவர்கள் கள் இயக்கத்துடன் விவாதிக்க முன்வர வேண்டும். ஒருவேளை கள் ஒரு போதை பானம் என்று உறுதி செய்தால், கள் இயக்கம் எங்களுடைய நிலைப்பாட்டில் இருந்து விலகி கொள்வோம். அதே சமயம் அதை நிரூபிப்பவர்களுக்கு 10 கோடி ரூபாய் அன்பளிப்பும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

 

தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்ததில் கிலோவிற்கு 1 ரூபாய் வீதம் லஞ்சமாக பெறப்பட்டது உண்மை தான் என்று கூட்டுறவு. துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். எனவே தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் ஒன்றிய அரசானது இந்தியாவில் 69 சதவீதம் பாலில் கலப்படம் உள்ளது என்று ஒப்புக்கொண்டுள்ளது. எனவே கலப்படத்தை தடை செய்தும், கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தாலே நோய் பாதிப்பு இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். அதிக அளவில் கலப்படம் செய்வது தான், பல நோய்களுக்கு ஆதார மாத உள்ளது. தென்னை மரத்திலிருந்து நீரா இறக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் இந்த நீரா என்ற பானத்தில் எந்தவித கலப்படமும், நிறமிகளும், பதப்படுத்தும் கெமிக்கல்கள் என எதுவும் கலக்கவில்லை. ஆனால் அதற்கு பல கட்டுப்பாடுகள் விதிமுறைகள் உள்ளது. எனவே அவற்றை தளர்த்தி நீரா இறக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க முன்வர வேண்டும்.

 

தற்போது பால் கொள்முதல் எடுத்துக்கொண்டால் சொசைட்டியில் 1லி பசுமாட்டு பால் ரூ.31க்கு கொள்முதல் செய்கிறார்கள். அதே பாதை தனியார், ரூ.40க்கு கொள்முதல் செய்கிறார்கள். எருமை பாலை 1லி ரூ.44க்கு சொசைட்டி, கொள்முதல் செய்கிறது. தனியார் ரூ.60க்கு கொள்முதல் செய்கிறது. இப்படி பட்ட நிலை தொடர்ந்து நீடித்தால் ஆவின் நிறுவனத்தை இழுத்து மூடும் நிலை உருவாகும். எனவே அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர முன்வர வேண்டும். மேலும் பனை, தென்னை,ஈச்சம் மரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களுக்கு மதிப்பு கூட்டு பண்டங்களாக மாற்றி அதை கொண்டு பொருளாதாரத்தை பெருக்கினால் அரசிற்கும் நல்ல வருமானம் கிடைக்கும். எனவே இந்த கோரிக்கைகளை அரசு செயல்படுத்திட முன்வர வேண்டும். கள் என்பது போதை பானம் அல்ல. அது ஒரு உணவு பொருள் என்பதை அரசு உணர்ந்திட முன்வர வேண்டும். 30 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்து வருகிறோம் என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.