Skip to main content

நாகுடி போராட்டத்தில்  திருநாவுக்கரசர், ஜி.கே. வாசன் பங்கேற்பு

Published on 26/08/2018 | Edited on 27/08/2018
n

  

 7 அமைச்சர்கள் இணைந்து கல்லணையில் தண்ணீர் திறந்தார்களே அந்த தண்ணி இன்னும் எங்க ஊருக்கு வரலயே எங்கே போச்சு அந்த தண்ணி.. வறட்சி நேரத்துல கூட கடைசி நேரத்தில் தண்ணீர் இன்றி பயிர் கருகி இருக்கு.. ஆனா இந்த வருசம் அணைகளை உடைத்துக் கொண்டு தண்ணீர் போகும் நேரத்தில் விதைக்கும் போதே கருகும் அவல நிலை எப்படி வந்தது. ஆளும் அரசாங்கமும், அதிகாரிகளும் தான் காரணம். எங்களுக்கு தண்ணீர் கொடு.. இல்லை என்றால் கல்லணை கால்வாய் ஓரமாகவே காத்திருக்கிறோம் என்று கல்லணை கால்வாய் கடைமடை பாசன விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் 22 ந் தேதி புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி கிராமத்தில் கல்லணை கால்வாய் கரையோரம் தொடங்கிய விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் படிப்படியாக நெடுவாசல் போராட்டம் போல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

 

    விவசாயிகள் தங்கள் வாழ்வாதரத்திற்காக போராட்டக் களத்திற்கு வந்திருக்கும் நிலையில் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கல்லூரியில் என்ன வேலை என சில மாணவர்கள் எழுப்பிய கேள்வி.. அறந்தாங்கி பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி மாணவ, மாணவிகளை பொங்கி எழ வைத்தது. 4 வது நாள் போராட்டத்திற்கு அணிவகுத்து வந்து பந்தலை நிறைத்தார்கள் மாணவ, மாணவிகள்.. தண்ணீர் கொடு.. தண்ணீர் கொடு... கடைமடைக்கும் தண்ணீர் கொடு என்று முழக்கங்களை எழுப்பிய மாணவ மாணவிகள் எங்களைப் பொல மற்ற கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டக் களத்திற்கு வந்தால் தான் ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போல வெற்றியை பெற முடியும் என்றனர் ஆவேசமாக.

 

    விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதை அறிந்த திமுக,  காங்கிரஸ், தேமுதிக, கம்யூனிஸ்ட்கள், த.மா.கா, அ.ம.மு.க என்று மேலும் பல கட்சிகளும் தங்கள் தலைவர்களை போராட்டக் களத்திற்கு அழைத்துள்ளனர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் முதல் நாளே வந்து சென்றார். இன்று 4. வது நாளில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் 4 வது நாளான சனிக்கிழமை பங்கேற்றனர்.

 

n

 

திருநாவுக்கரசர்... தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு பக்கம் அதிக நீர் வரத்தால் வெள்ளம் போகிறது. ஆனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. இதற்கு காரணம் பொதுப்பணித்துறையின் அலட்சியமே . பொதுப்பணித்துறையினர் முறையாக ஆறுகளை தூர்வாரியும், அணைகள், குளங்களை பராமரிக்காததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

 

பொதுப்பணித்துறையை கவனிக்கும் முதல் அமைச்சர் தனது துறை முறையாக கவனிக்கவில்லை. நாகுடி பகுதிக்கு முறையாக தண்ணீர் வராததால், இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கடைமடை பகுதிக்கு தேவையான தண்ணீரை பெற்றுத்தர முதல்அமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

 

     தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர; ஜி.கே.வாசன்.. கடைமடை பகுதி விவசாயிகளுக்கு இது இருண்ட காலமாக இருக்கிறது. 10 நாட்களில்  2 முறை மேட்டூர் அணை நிரம்பியும் கூட, கடைமடை பகுதிகளில் ஏரி, குளங்கள்  வறண்டு கிடக்கிறது. இதற்கு காரணம் பல ஆண்டுகளாக தூர்வாராமல் இருந்ததால்தான். தண்ணீர் 120 அடியை எட்டியபோதும்,  30 நாட்களுக்கு பிறகும் தண்ணீர் வராத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசுதான்தான் முழு பொறுப்பும் ஏற்க வேண்டும். 


     தமிழக அரசின் நீர்மேலாண்மை முறையாக நடைபெறவில்லை. பொதுப்பணித்துறை தூங்கி கிடக்கிறது. அது உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தமிழக அரசு நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். விவசாயிகளை சேற்றில் கால் வைத்தால்தான் மற்றவர்கள் சோற்றில் கை வைக்கமுடியும் என்பதை உணர்ந்து ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தல் பணியைவிட சிறுத்தையை பிடிப்பதே முதல் பணி'-ஜி.கே.வாசன்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'The first task is to catch the leopard rather than the election task' - GK Vasan speech

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி இன்று (04/04/2024) அந்த உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை வனத்துறையினரை பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை தேடும் பணிக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. கூறைநாடு, செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு என பல இடங்களுக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பது வனத்துறையினருக்கு அதனை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொது மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 'தேர்தல் பணியை விட சிறுத்தையை பிடிப்பதே முக்கியம். ஏனென்றால் வாக்காளர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வைப்பது அரசின் கடமை' என தெரிவித்தார்.

Next Story

த.மா.க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜி.கே.வாசன் (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 01/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், நேற்று (31-03-24) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் குறித்த ஒளிநாடாவை வெளியிட்டு, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசினார்.