Skip to main content

வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற திடீர் யாக பூஜைகள்! 

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

tindivanam taluk office new tahsildar charged and conducted special pooja

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 18 ஆம் தேதி அதிகாலையில் வட்டாட்சியர் அலுவலக அறையில் கணபதி ஹோமம் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு அலுவலக வாசலில் பூசணிக்காய் உடைத்து திருஷ்டி பரிகாரம் செய்யப்பட்டது. மேலும் வட்டாட்சியர் பயன்படுத்தும் அரசு வாகனத்திற்கும் மாலை அணிவித்து தீபம் காட்டி வழிபாடு செய்து திருஷ்டி கழித்துள்ளனர்.

 

இந்த திடீர் யாக பூஜை வழிபாடு ஏன் என வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் சிலரிடம் விசாரித்தபோது இங்கு ஏற்கனவே வட்டாட்சியராக சிறப்பாக பணி செய்த வெங்கடசுப்பிரமணியம், மக்கள் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றித் தந்த அவர், காஞ்சிபுரம் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் காரில் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தபோது வந்தவாசி அருகே சாலை விபத்தில் வெங்கடசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் வெங்கடசுப்பிரமணியன் மரணம் அடைந்த காரணத்தால் யாகமும், சிறப்பு யாகமும் நடத்தப்பட்டது. இதையடுத்து வெங்கடசுப்பிரமணியம் பணியாற்றி வந்த திண்டிவனம் வட்டாட்சியர் பதவிக்கு, மேல்மலையனூர் வட்டாட்சியராக இருந்த அலெக்சாண்டர் என்பவர் திண்டிவனம் வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பரிகார பூஜைகள் அனைத்தும் நடந்து முடிந்த பிறகு புதிய வட்டாட்சியராக நியமிக்கப்பட்ட அலெக்சாண்டர், திண்டிவனம் சப் கலெக்டர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் வட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் புதிய வட்டாட்சியருக்கு மட்டுமின்றி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் அனைத்து ஊழியர்களுக்கும் வெங்கடசுப்பிரமணியன் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலிருந்து அனைவரும் மீள்வதற்காகவே இந்த யாக பூஜை மற்றும் திருஷ்டி பரிகாரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.  வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீரென யாக பூஜைகள் நடைபெற்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.