Skip to main content

விடுதிக்குள் புகுந்த புலி... சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

The tiger who sneaked into the hotel ... Shocked by the CCTV footage!

 

நீலகிரி வனப்பகுதிக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதியில் நள்ளிரவில் புலி ஒன்று விடுதிக்குள்ளே நுழையும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் கர்நாடகாவில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகியவை ஒன்றிணைந்த பகுதியில் சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதுமலை-பந்திப்பூர் வன எல்லையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சுமார் இரவு 10 மணிக்குப் புலி ஒன்று உள்ளே புகுந்துள்ளது.

 

யாரும் இல்லாத நேரத்தில் nவிடுதியின் கதவு திறந்திருந்த நிலையில் சுமார் 7 வயது மதிக்கத்தக்கப் புலி உள்ளே புகுந்து சமைக்கும் அறை வரை சென்று சுற்றிவிட்டு மீண்டும் விடுதியை விட்டு வெளியேறியது. இந்த காட்சிகள் விடுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அந்த விடுதி வளாகத்தில் புலி உலாவிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்