Skip to main content

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை; குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீஸ்; களத்தில் நடந்தது என்ன? 

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

Thoothukudi lawyer case; Police catch the criminal; What happened on the field?

 

தூத்துக்குடி வழக்கறிஞர் கொலை வழக்கில் குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர்.

 

கடந்த பிப் 22 அன்று தூத்துக்குடியின் சோரீஸ்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், மதியம் நீதிமன்ற வேலையை முடித்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள தனது பைனான்ஸ் நிறுவனத்திற்கு வந்திருக்கிறார். அதே சமயம் அவரை 2 பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஒன்று அவரைச் சுற்றி வளைத்து வெட்டிக் கொலை செய்தது. இந்தப் படுகொலை தொடர்பாக சிப்காட் காவல்துறையினர் 10க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். காவல்துறையினர் கொடுத்த கடுமையான குடைச்சல் காரணமாக வேல்முருகன், ராஜரத்தினம், இலங்கேஸ்வரன், முத்துராஜ் மற்றும் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷின் சகோதரர் ரமேஷ் உள்ளிட்டோர் மூன்று வெவ்வேறு நீதிமன்றங்களில் சரணடைந்தனர். லட்சுமணப் பெருமாள், நமோ நாராயணன் என்ற இருவர் கைது செய்யப்பட்டனர். கோரம்பள்ளம் ஜெயப்பிரகாஷ் என்பவரை மகாராஷ்ட்ரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் காவல்துறையினர் தேடி வந்தனர்.

 

இந்நிலையில் ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி அருகேயுள்ள தட்டப்பாறை – மறவன்மடம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணனுக்கு முக்கியமான க்ளு கிடைத்தது. எஸ்.ஐ. ராஜபிரபு தலைமையிலான எஸ்.பி.யின் தனிப்படையினர் குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றி வளைத்தனர். அதே சமயம் ஜெயப்பிரகாஷ் தப்பிப்பதற்காக ஏட்டு சுடலைமணியின் கையை வெட்டியிருக்கிறார். இதனால் பதற்றமான எஸ்.ஐ. ராஜபிரபு தப்பிக்க முற்பட்ட ஜெயப்பிரகரஷை மடக்க முயன்ற போது அவரையும் ஜெயப்பிரகாஷ் அரிவாளால் வெட்டியிருக்கிறார். இதனால் எஸ்.ஐ.க்கு தோள்பட்டை மற்றும் கையிலும் வெட்டு விழவே, சுதாரித்த எஸ்.ஐ. ராஜபிரபு தன்னிடமிருந்த பிஸ்டலால் ஜெயப்பிரகாஷை நோக்கி சுட்டுள்ளார். குண்டு ஜெயப்பிரகாஷின் காலின் மீது பாய்ந்திருக்கிறது. சுருண்டு விழுந்தவரை தனிப்படையினர் மடக்கிப் பிடித்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். காயமடைந்த ஏட்டு சுடலை மணியும், எஸ்.ஐ. ராஜபிரபுவும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை எஸ்.பி. பாலாஜி சரவணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

 

எஸ்.பி.யான பாலாஜி சரவணன் இது குறித்து கூறும்போது, “வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் முக்கிய எதிரியான ஜெயப்பிரகாஷ் தட்டப்பாறை பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலால் தனிப்படையினர் அவரைச் சுற்றி வளைத்திருக்கின்றனர். அப்போது அவர் போலீசாரை அரிவளால் வெட்டியிருக்கிறார். அதையடுத்தே தற்காப்பிற்காக போலீசார் அவரை சுட்டனர்” எனக் கூறினார். வழக்கறிஞர் கொலையின் முக்கிய குற்றவாளி துப்பாக்கியால் சுடப்பட்டு வளைக்கப்பட்டது முத்து நகரை பரபரப்பாக்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.