Skip to main content

வள்ளலார் தைப்பூச திருவிழா... ஜோதி காண குவியும் பக்தர்கள்...!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

தைப்பூச திருநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 149-வது  ஜோதி தரிசனம் இன்று காலை 6 மணி முதல் தொடங்கியது. கருப்பு, நீலம், பச்சை, செம்மை, பொன்மை, வெண்மை, கலப்புத் திரை ஆகிய 7 திரைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டப்பட்டது.

 

Thaipusam and jothi darisanam

 



ஆன்ம நேய வழிபாட்டில் புதிய அர்த்தத்தை கொடுத்தவர்  வள்ளலார்.  கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து 7 கி.மீ தொலைவிலுள்ள மருதூர் கிராமத்தில் வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்க அடிகள் பிறந்தார். இராமையா பிள்ளைக்கும், சின்னம்மைக்கும் அருந்தவ புதல்வராக வள்ளலார், 5-10-1823- ல் சுபானு ஆண்டு புரட்டாசி மாதம், 21 ஞாயிறு மாலை 5.54 மணி அளவில் பிறந்தார். வள்ளற்பெருமான் பிறந்த ஆறாம் மாதமே தந்தையை இழந்தார். அதன் காரணமாக சென்னைக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. தன் அண்ணன் இராமையா பிள்ளை அவர்களின் அரவணைப்பில் வளர தொடங்கிய வள்ளலார் கல்வியில் நாட்டமின்றி இறைவழிப்பாட்டில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். தனது ஒன்பதாவது வயதில் சொற்பொழிவுகளின் மூலம், ஆன்மீக பயணங்களை தொடங்கினார் வள்ளலார். இல்லறத்தில் நாட்டமின்றி உள்ளம் கடவுளை நாடியது, சாதி, மத கடவுள்களை வழங்குவதை விடுத்து கடவுளை ஜோதி வடிவமாக வணங்கினார்.

சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு வந்து, அங்கிருந்து வடலூர் அருகே உள்ள கருங்குழியில் தங்கி மக்களுக்கு ஆன்மீகம், சித்தமருத்துவம் உள்ளிட்ட வாழ்வியல் நெறிமுறைகளை போதித்தார். கருங்குழியில் தங்கி இருந்த போது எண்ணை என நினைத்து, தண்ணீரை ஊற்றி விளக்கெறிய செய்த அதிசயமும் நிகழ்ந்தது. அவரது போதனைகளான ஐந்து திருமுறைகளும் உருப்பெற்றது இங்குதான்.மேலும் கருங்குழிக்கு அடுத்த மேட்டுகுப்பத்தில் காலை வேளையில் பல் துலக்கி கொண்டு சென்ற போது தண்ணீர் இல்லாததால் தன் கையில் இருந்த பல் துலக்கும் குச்சியின் மூலம், ட வடிவில் கோடு கிழிக்கவே அங்கு நீர் ஊற்று வர துவங்கியது. அந்த நீர் ஊற்று தற்போதும் இங்கு காணபடுவது அதிசயமே!

 



சன்மார்க்கம் என்ற கொள்கைகளான, ஜீவகாருண்யம், உயிர் கொல்லாமை, புலால் மறுத்தல் போன்ற கொள்கைகளை மக்களிடையே பரப்ப 2-2-1867 ஆம் ஆண்டு சமரச சுத்த  சன்மார்க்க சங்கத்தை வடலூரில் துவங்கி சன்மார்க்க நெறியை பரப்பினார். பசியை பிணியாக கருதிய வள்ளலார் பசியுடன் வருவோருக்கு உணவு அளித்திட 23-5-1867 பிரபவ வருடம், வைகாசி மாதம் 11 ஆம் தேதி சத்திய தர்மசாலையை நிறுவி, அன்னதானம் வழங்க அணையா அடுப்பை ஏற்றினார். இறைவனை அருட்பெருஞ்ஜோதி வடிவில் கண்ட பெருமானார், அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டிற்கென வடலூரில் 1872- ல் சத்திய ஞான சபையை நிறுவினார்.

உலகில் வேறு எங்கும் இல்லாத தனிபெரும் அமைப்பாகவும் சாதி, மதம், இனம், மொழி, தேசம் முதலிய எந்தவித வேறுபாடுகளும், இல்லாத நிலையில், அனைவரும் பிராத்தனை செய்யும் முறையில் சத்திய ஞான சபையை வள்ளற்பெருமான் அமைத்தார். சத்திய ஞானசபையில் தினசரி காலை 6-00 மணி முதல் இரவு 8 மணி வரை திருவருட்பா பாடல்களை பாடி அன்பர்கள் பிராத்தனை செய்கின்றனர்.பகல் 11-30 மணி முதல் 12 மணி வரையிலும், இரவு 7-30 மணி முதல் 8 மணி வரையிலும் பூசை நடைபெற்று வருகிறது.

 



மாதம் தோறும், மாத பூசம் நடைபெறுவது வழக்கம், அதன்படி இரவு 8 மணி முதல் 8-30 மணி வரை ஆறு திரைகள் நீக்கி மூன்று முறை அருட்பெருஞ்ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பிரதி தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி ஆறு காலம் ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெறும். தைப்பூச ஜோதி தரிசனம் காலை 6-00 மற்றும் 10 மணிக்கும், மதியம் 1-00 மணி மற்றும் இரவு 7-00, 10-00மணிக்கும், மறுநாள் காலை 5-30 மணிக்கும் ஆறு காலங்கள் ஜோதி தரிசனம் நடைபெறும்.

சத்திய ஞான சபையில் வழிபாடு செய்பவர்கள் புலை, கொலை,  தவிர்த்தவராக இருத்தல் வேண்டும் என்பது வள்ளற்பெருமான் வகுத்த விதியாகும். சித்திவளாக திருமாளிகையான மேட்டுகுப்பம், வடலூருக்கு தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது மேட்டுக்குப்பம் என்னும் கிராமம்.  அந்த கிராமத்தில் சித்திவளாகம் என்னும் இடத்தை நிறுவி வாழ்ந்த வள்ளற்பெருமான் தான் வாழ்ந்த அறையிலேயே 1874-ஆம் ஆண்டு இறைவனுடன் ஜோதியாக கலந்தார். பசித்திரு, தனித்திரு, விழித்திரு, எனவும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்கிற உன்னதமான மாஹா மந்திரத்தை அருளி சென்றார் வள்ளற்பெருமான். இன்று தைப்பூச ஜோதி தரிசனத்தை காண நேற்று இரவு முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடலூர் சத்திய ஞான சபைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.