Skip to main content

நலம் பெற்று வருகிறார் தோழர் தா.பாண்டியன்!

Published on 11/09/2018 | Edited on 12/09/2018
police

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் மூச்சு திணறல் காரணமாக நேற்று முன்தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அட்மிட்டானார். தா.பா.வுக்கு மூச்சு திணறலுடன் சளி தொந்தரவும் இருந்துள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு மார்பில் கோர்த்துள்ள சளியை அகற்றி வருகிறார்கள் மருத்துவர்கள். இன்று சிகிச்சையில்  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்து வழக்கமான பணிகளை செய்கிறார். நலம் பெற்று வரும் தா.பா.வை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சி.மகேந்திரன் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். இன்னும் ஓரிரு நாட்களில் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என தோழர்கள் கூறுகிறார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்