Skip to main content

இளம்பெண் மரணம்:  போலீசில் புகாரளித்த தாய்!!

Published on 02/02/2022 | Edited on 02/02/2022

 

Teen passed away: Mother files complaint with police

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ளது மதுரவல்லி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி சாந்தி தம்பதியருக்கு ராஜ்குமார், நித்தியா, சுமித்ரா, சண்முகம் ஆகிய நான்கு பிள்ளைகள் உள்ளனர். அய்யாசாமி அயல் நாட்டில் பணி செய்து வருகிறார். மகன் ராஜ்குமாருக்கு திருமணம் ஆகிவிட்டது. மகள் சுமித்ராவை கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தகுடி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரது மகன் ராஜா என்பவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்து 4 மாதங்கள் கடந்தும் சுமித்ரா அவரது கணவர் ராஜா இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது.

 

கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்படும் சண்டை காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சுமித்ரா தந்தை வீடான மதுரவல்லி கிராமத்தில் வந்து தங்கியுள்ளார். அவரது கணவர் ராஜா நேற்று முன்தினம் இரவு மனைவியை பார்ப்பதற்காக மதுரவல்லி கிராமத்திற்கு வந்து வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள சாந்தியின் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள சுமித்ராவின் தாய் சாந்தி அவரது சகோதரர் சரவணன் ஆகியோர் சென்று விட்டனர். சுமித்ரா அவரது கணவர் ராஜாவும் வீட்டில் இருந்துள்ளனர். இந்த நிலையில் சுமித்ராவின் கணவர் ராஜா காலையில் சுமித்ராவின் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

 

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற சுமித்ராவின் தாய் சாந்தி சகோதரர் சரவணன் இருவரும் அங்கிருந்தபடி சுமித்ராவுக்கு போன் செய்து மாப்பிள்ளை ராஜா வீட்டில் இருக்கிறாரா ஊருக்குச் சென்று விட்டாரா என்று விசாரிப்பதற்காக போன் செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சுமித்ரா போனை எடுத்து பதில் கூறவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் சாந்தி அதே ஊரில் உள்ள உறவினருக்கு போன் செய்து சுமித்ராவுக்கு போன் செய்தோம்  சுமித்ரா போனை எடுத்து பேசவில்லை எனவே எங்கள் வீட்டிற்கு விரைவாக சென்று சுமித்ரா என்ன செய்கிறார் என்று பார்த்துவிட்டு எனக்கு உடனே போன் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

 

அதன்படி அவரது உறவினர் சுமித்ரா வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு சுமித்ரா தூக்கில் தொங்கியுள்ளார். இந்த தகவலை அவர் சாந்திக்கு தெரியப்படுத்தியுள்ளார். அவர்கள் அங்கிருந்து பதட்டத்துடனும் அதிர்ச்சியுடனும் மதுரவல்லி வந்து சேர்ந்தனர். சுமித்ரா தாய் சகோதரர் மற்றும் ஊர் மக்கள் மிகவும் சோகத்தில் அழுதனர். இதையடுத்து தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது வரதட்சணை கேட்டு சுமித்ராவின் கணவர் ராஜா அவரது உறவினர்கள் கொடுமைப்படுத்தியதால் தான் மகள் சுமித்ரா தங்கள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

 

சுமித்ராவை பார்ப்பதற்காக வந்த அவரது கணவர் ராஜா நாங்கள் இல்லாத நேரத்தில் ஏதாவது சுமித்ராவை கொடுமைப்படுத்தி இருக்கலாம்? எனது மகள் சாவுக்கு அவர் காரணமாக இருக்கலாம்? எனவே மகள் சாவில் சந்தேகம் உள்ளது என்று வேப்பூர் காவல் நிலையத்தில் சுமித்ராவின் தாய் சாந்தி புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திட்டக்குடி டிஎஸ்பி சிவா, வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக மதுரவல்லி கிராம மக்களும் கூறுகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.