Skip to main content

சின்ன கலைவாணர் மறைவிற்கு மண்ணின் மைந்தர்கள் கண்ணீரஞ்சலி!

Published on 18/04/2021 | Edited on 18/04/2021

 

vivek

 

சமூகக் கருத்துக்களால் சிரிக்க வைத்து சிந்திக்க வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கே. அவரின் ஜெராக்ஸாக அவதாரமெடுத்தவர் சின்ன கலைவாணர் என்ற அடைமொழியால் அடையாளம் காணப்பட்ட நடிகர் விவேக். இவரது பிறப்பிடம் தென்காசி மாவட்ட சங்கரன்கோவிலில் உள்ள பெருங்கோட்டூர். அமைதிக் குணமும் ஈகைப்பண்பும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர் விவேக். காலம் அவரை சென்னைக்கு அழைத்துப் பிரபலமாக்கியது.

 

vivek

 

நெல்லை மண்ணில் பிறந்து, நெல்லை மண்ணை சுவாசித்து, நெல்லை மண்ணின் நீண்ட வசனத்தை திரையில் பேசி திருநெல்வேலிக்குப் பெருமை சேர்த்த உரிமையாளன் விவேக். சங்கரன்கோவில் அருகே சரித்திரப் புகழ்பெற்ற தாய் பிறந்த பெருங்கோட்டூரில் தவமாய் பிறந்து கோவில்பட்டி மண்ணில் கோலோச்சி தெற்குச் சீமையின் தென் பொதிகைக் காற்றின் தமிழைச் சுவைத்து தன்மானம் கொண்ட தமிழனாய் என்றும் தலை நிமிர வென்றவர் விவேக்.

 

vivek

 

கூட்டணி கட்சி ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. வேட்பாளர் ராஜா அவரின் கனவான மரக்கன்றுகள் மரக்கன்றை  நட்டு  வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். மண்ணின் மைந்தனுக்கு, மரங்களின் நாயகனுக்கு, மண்ணின் வாசிகளின் ஆழ்ந்த கண்ணீரஞ்சலி என சங்கரன்கோவில் நகரவாசிகள் திரண்டு ஆழ்ந்த இரங்கலை கண்கள் குளமாக செலுத்தியுள்ளனர்.

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு விவேக்கின் தாயார் சென்னையில் காலமானாலும், அவரின் ஜென்ம பூமியான பெருங்கோட்டூர் மண்ணிற்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி காலமானார்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
mdmk MP Ganesamurthy passed away

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

Next Story

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

Published on 24/12/2023 | Edited on 24/12/2023
Comedian Bonda Mani passed away


சென்னையில் உள்ள வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நடிகர் போண்டாமணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.

'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் போண்டாமணி அதனைத் தொடர்ந்து வடிவேலு, கவுண்டமணி உள்ளிட்ட நகைச்சுவை நடிகர்களின் கூட்டணியில் பல்வேறு காட்சிகளில் கலக்கியிருந்தார். குசேலன், சச்சின், வேலாயுதம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் போண்டா மணி.

இந்நிலையில் அண்மையில் சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போண்டா மணி வீட்டில் ஓய்வுபெற்று வந்த நிலையில் இன்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் போண்டாமணியின் மறைவு ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் திரையுலகினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.