Skip to main content

கற்பித்தல் பணி பெரும்பாதிப்பு... தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

 

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தொடர் பயிற்சிக்கு தினந்தோறும் செல்வதால் மாணவர்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பயிற்சி முடிந்தால் அடுத்தப்பயிற்சி என தொடர்ந்து ஆசிரியர்கள் செல்வதால் புதியப் பாடத்திட்டம், வினாத்தாள் முறை மாற்றம் போன்ற நிலையில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை செய்யவிடாமல் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயாரவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

Coaching



 

இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், பள்ளிகளில் கற்பித்தல் பணியை தவிர ஏதாவது ஒரு பயிற்சிக்கு ஆசிரியர் செல்லும் நிலையே உள்ளது. மேற்கண்ட பயிற்சிகள் அவசியமானது வரவேற்க கூடியது என்றாலும் அப்பயிற்சிகள் நடத்துவதற்கான காலம் இதுவல்ல. இதனால் தேர்வுகாலங்களில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும் பாதிப்புள்ளாகுகின்றனர். ஆசிரியர்களும் குறிப்பிட்ட இலக்கை எட்டமுடியாமல் கற்பித்தலுக்கு வாய்ப்புத் தராததால் மாணவர்களுக்கு வெற்றிப் பாதிக்குமோ என்று மனஉளைச்சலில் உள்ளார்கள். பள்ளிக் கல்வித்துறையின் மாநிலப் பாடத்திட்டத்தில் கற்பிக்கும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சிகள் வழங்கப்படுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


அனைத்துப் பயிற்சிகளும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடத்திட ஆவண செய்ய வேண்டுகின்றோம். மேலும் பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவதால் தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கும் அனைத்துவகை பயிற்சிகளும் ரத்துசெய்திடும்படி பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தந்தை உயிரிழப்பு;துயரத்திலும் துவண்டுவிடாமல் தேர்வெழுதிய மகள்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Daughter who has written class 12 exam

தந்தை உயிரிழந்த நிலையில் மகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தின வடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16). இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.  

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுதச் செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.