Skip to main content

மணல் குவாரியில் சிக்கி சிறுமி உயிரிழப்பு-நாகை அவலம்!

Published on 29/11/2020 | Edited on 29/11/2020
incident in nagai

 

அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டிய போலீசாரும் மணல் மாஃபியாக்களிடம் கையூட்டுப் பெற்றுக்கொண்டு மறைமுகமாக மணல் கொள்ளைக்கு அனுமதிப்பதால் விளைநிலங்களையும், குளங்களைம், ஆறுகளையும் பாதாளமாக குடைந்தெடுக்கின்றனர்  மணல் மாஃபியாக்கள். அப்படி தோண்டபட்ட இடங்களில் அப்பாவி குழந்தைகள் தவறிவிழுந்ரு பலியாகும் அவலம் தொடர் நிகழ்வாகிவருகிறது.

 

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே காவிரி ஆற்றில் தொடரந்து நடந்த மணல் கொள்ளையால் குளிக்க சென்ற சிறுவர்கள் சுழலில் சிக்கி இறந்தனர். அதேபோல நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் குளத்தில் தோண்டி எடுக்கப்பட்ட மணல் குழியில் சிக்கி ஒரு குழந்தை இறந்துபோனார்.  அந்த வகையில் மணல் குவாரியில் தேங்கியிருந்த நீரில் விழுந்து 7 வயது சிறுமி பலியாகியிருக்கிறார்.

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள கிராமம் கீழகுறிச்சி. அங்கு 300-க்கும் அதிகமான ஏழை எளிய மக்கள் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான ஐயனார் கோவில் திடலில் தனி நபர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி மணல் குவாரி அமைத்து மணல் எடுத்து விற்பனை செய்துவந்துள்ளார்.

 

அரசு விதித்துள்ள விதிமுறைகளையும் மீறி அளவுக்கு அதிகமான ஆழத்தில் மணல் எடுத்திருந்ததால் அந்த பகுதியே படுபாளமாகியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளுக்கு தொடர்ந்து தகவல் கூறிவந்துள்ளனர். ஆனால் அதிகாரிகளோ கையூட்டு பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமலேயே இருந்துவிட்டனர்.

 

incident in nagai

 

இந்தநிலையில் நிவர் புயல் காரணமாக தண்ணீர் தேங்கி ஏரிபோல் காணப்பட்டது. அங்கு ஏற்கனவே இருந்த தண்ணீரைக் கொண்டு இறால் வளர்த்துள்ளனர். அதற்காக மிதவை ஒன்றை கொண்டுவந்து போட்டிருந்தனர். இதனை கண்ட சிறுமிகள் படகு என நினைத்து, தண்ணீரில் மிதந்த மிதவையில் ஏறி விளையாட சென்றுள்ளனர். அந்த சிறுமிகளில் ஒருவரான கீழகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மகளான மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியான தமிழ்செல்வி, மணல் குவாரி தண்ணீருக்குள் விழுந்துவிட்டார்

 

இதனைக் கண்ட மற்ற சிறுமிகள் தமிழ்செல்வியை மீட்க முயன்றிருக்கின்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அங்கிருந்து பதற்றத்துடன் ஓடி சென்று ஊரில் உள்ளவர்களிடம் கூறியதும். கிராம மக்கள் திரண்டு வந்து தண்ணீரில் குதித்து தேடினர். அப்போது சுமார் 10 அடி ஆழத்தில் சிறுமியின் உடல் சேற்றில் சொருகி இறந்த நிலையில் உடலை மீட்டனர்.

 

தமிழ்செல்வியின் உடலைக் கண்டு ஒட்டுமொத்த கிராமமும் கண்ணீர் விட்டது. மணல் குவாரியில் சிறுமி உயிரிழந்த சம்பவம் கீழக்குறிச்சி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.