Skip to main content

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதலமைச்சர் சந்திப்பு!

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

 

TAMILNADU CHIEF MINISTER MKSTALIN MEET PM NARENDRA MODI IN DELHI

இன்று காலை (17/06/2021)  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இருந்து கார் மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையம் வந்தார். அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற தமிழக முதலமைச்சருக்கு அமைச்சர்கள், தி.மு.க.வின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். 

 

அதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரை வரவேற்றனர். 

 

அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17/06/2021) மாலை 05.00 மணிக்கு சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடனிருந்தார். 

 

இந்த சந்திப்பில், தமிழக வளர்ச்சித் திட்டங்கள், தமிழகத்திற்கு கூடுதல் கரோனா தடுப்பூசிகள், செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசித் தயாரிப்பதற்காக தடுப்பூசி உற்பத்தி மையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, நீட் தேர்வு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள், மேகதாது அணை விவகாரம், கருப்பு பூஞ்சை மருந்து, மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை, ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் உள்ளிட்டவைக் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாக தகவல் கூறுகின்றன. 

 

பிரதமர் நரேந்திர மோடி- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே சந்திப்பு 25 நிமிடங்கள்  நடைபெற்றது.

 

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றப்பின் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.