Published on 11/09/2020 | Edited on 11/09/2020

தமிழக சட்டப்பேரவை வரும் 14- ஆம் தேதி கூட உள்ள நிலையில், எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா பரிசோதனை தொடங்கியது. எம்.எல்.ஏ.க்களின் வீடுகளுக்கு சென்று சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு இன்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
பத்திரிகையாளர்களுக்கு தலைமைச் செயலகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.