Skip to main content

“இந்திக்காரங்க அடிச்சதுல செத்துட்டான்” - வட இந்தியர்கள் தாக்கியதில் சகோதரர் உயிரிழந்ததாக இளைஞர் வேதனை

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

Tamil Nadu youth passed away attack by North Indians

 

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் சின்னமலை பகுதியைச் சேர்ந்தவர் ஜாயின்ஷா. 23 வயதான அவரை காணவில்லை எனக் கூறி அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். 

 

சைதாப்பேட்டை தாடண்டர் விளையாட்டுத் திடலின் அருகே ஜாயின்ஷா தாக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்குச் சென்ற உறவினர்கள் ஜாயின்ஷாவை மீட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

மருத்துவமனையில் ஜாயின்ஷாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரின் இறப்பிற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

ஜாயின்ஷாவின் சகோதரர் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த போது, “தாடண்டர் நகரின் அருகில் இருக்கும் மைதானத்தின் எதிரில் இருக்கிறான் எனச் சொன்னார்கள். நாங்கள் உள்ளே சென்றோம்.  இந்திக்காரர்கள், தமிழ்க்காரர்கள் அவனை அடித்து ஒரு அறையில் வைத்திருந்தனர். 

 

நாங்கள் அவன் அருகே சென்றபோது சுயநினைவின்றி தான் இருந்தான். எழுந்து நிற்க வைக்க முயன்றபோது என்னால் முடியவில்லை எனக் கூறினான். சிறிது தண்ணீர் குடித்தான். நான்தான் என் தோளில் தூக்கினேன். அப்படியே கீழே விழுந்துவிட்டான். கருவிழி மேலே சென்றுவிட்டது. ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தேன். அவர்கள் போன் எடுக்கவில்லை. போலீசுக்கு போன் செய்தேன். அவர்களும் சரியாகப் பதிலளிக்கவில்லை.

 

நான் என் வண்டியிலேயே அவனை உட்காரவைத்து, நான் பிடித்துக்கொண்டே வந்துவிட்டேன். மருத்துவமனையில் சேர்த்த பின், இறந்து 20 நிமிடங்கள் ஆகிறது எனச் சொல்லிவிட்டார்கள்” எனக் கூறினார்.

 

அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சைதாப்பேட்டை இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.