Skip to main content

'ஊரடங்கில் கல்விக்கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தாதீர்'- தமிழக அரசு!

Published on 21/04/2020 | Edited on 21/04/2020

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழகத்தில் ஊரடங்கின்போது கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களின் பெற்றோரை கட்டாயப்படுத்தக்கூடாது.

 

Tamil Nadu government has Suggest not to force tuition fees

 

2020- 21 ஆம் ஆண்டுக்கான கட்டணத்தை தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது. 2019-20 ஆம் கல்வியாண்டுக்கான கட்டணம் நிலுவையில் இருந்தாலும் அதைக் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது" என்று குறிப்பிட்டுள்ளது. கல்விக்கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவதாக பெற்றோரிடமிருந்து வந்த புகாரால் அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்