Published on 30/08/2021 | Edited on 30/08/2021
இன்று (30.08.2021) திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு மற்றும் குடிநீர் பாதுகாப்பு வார விழாவினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மழை நீர் சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விழாவின் போது திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கரோனா நிவாரண நிதியை முதல்வரிடம் வழங்கினார்.