Skip to main content

கோரமண்டல் ஆலையைத் திறக்க அனுமதி!

Published on 21/05/2024 | Edited on 21/05/2024
Permission to open the Coromandel plant

சென்னை எண்ணூரில் உள்ள கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில், கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி (26.12.2023) நள்ளிரவு 11:45 மணியளவில் உள்ள குழாய்களில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. இந்த வாயுக் கசிவினால், பெரியகுப்பம், சின்னகுப்பம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 60 பேருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் அதன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலாளர், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அலுவலர், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI) மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் அலுவலர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று உடனடியாக அமைக்கப்பட்டது. இக்குழு தனது உடனடி மதிப்பீட்டு அறிக்கை மற்றும் விரிவான அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

இதற்கிடையே தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இந்தச் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக இன்று (21.05.2024) இறுதி விசாரணை நடைபெற்றது. அப்போது தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வில், “கோரமண்டல் ஆலையை மீண்டும் திறக்க மாசு கட்டுப்பாட்டு வாரிய பரிந்துரைகள் மற்றும் தொழில் நுட்ப குழு பரிந்துரைகளைப் பின்பற்ற வேண்டும். இந்திய கடல்சார் வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். தொழில் பாதுகாப்பு துறை மற்றும் பசுமை தீர்பாயத்திடம் தடையின்மை சான்றிதழ் பெற்றிட வேண்டும் அதன்படி ஆலையைத் திறக்க அனுமதி வழங்கப்படுகிறது” எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'பணியை நிறுத்துங்கள்' - கேரள அரசுக்குப் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
'Stop work'-Green Tribunal orders Kerala Govt

சிலந்தி ஆற்றின் அருகே கேரள அரசு தடுப்பணைக் கட்டுவதாக வெளியான தகவலையடுத்து தமிழக எதிர்க்கட்சிகள் இதற்கு தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் எனப் பல்வேறு தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது. இந்தநிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

இது தொடர்பாக நேற்று எழுதப்பட்ட கடிதத்தில், 'சிலந்தி ஆற்றின் அருகே கட்டப்படும் தடுப்பணை பிரச்சனை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு விவரங்கள் மிகவும் தேவை என்பதால் இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்க வேண்டும். தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கு இடையேயான தோழமை உணர்வை நிலைநிறுத்த இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் வரை இந்தப் பணியை நிறுத்தி வைக்குமாறு கேரள அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்த வேண்டும். இந்தத் தடுப்பணை விவகாரம் குறித்த திட்டம் எதுவும் தமிழக அரசிடமோ அல்லது காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடுமோ வழங்கப்படவில்லை. திட்டம் தொடர்பான விவரங்களைத் தமிழகத்தின் நீர்வளத்துறைக் கூடுதல் முதன்மைச் செயலாளர் கேரள நீர்வளத்துறை அதிகாரிகளிடம் ஏற்கெனவே கேட்டுள்ளார். இத்திட்டம் குறித்தத் தற்போதைய நிலவரத்தின் முழு விபரங்களைத் தமிழ்நாடு அரசுக்கு கேரள அரசு உடனடியாக வழங்க வேண்டும்' என வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில் உரிய அனுமதிப் பெறாமல் நடத்தப்படும் சிலந்தி ஆற்றின் தடுப்பணைக் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும் எனக் கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் இதனைத் தானாக முன்வந்து பதிவு செய்து விசாரித்தது. அப்பொழுது கேரள அரசு 'சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டவில்லை. உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீரைப் பூர்த்தி செய்வதற்கான கலிங்கு அமைக்கப்பட்டு வருகிறது' எனக் கூறப்பட்டது. இதைக்கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள் 'எந்தக் கட்டுமான பணிகள்மேற்கொள்ளதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்றபின் தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை உரிய அனுமதிகளை பெறப்பட்டிருந்தால் அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். உரிய அனுமதிப் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றால் அதை உடனடியாக தடுத்துநிறுத்த வேண்டும்' எனக் கேரளா அரசுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து இது தொடர்பான விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

இன்சூரன்ஸ் பணத்திற்காகக் கொலை செய்த சம்பவம்; குழப்பத்தை ஏற்படுத்திய மற்றொரு புதிர்!

Published on 02/05/2024 | Edited on 02/05/2024
 Another Riddle  on Incident of insurance money at ennore

இன்சூரன்ஸ் பணத்திற்காக  நண்பனை கொலை செய்த விவகாரத்தில், இறந்தது டில்லிபாபு என முடிவு செய்திருந்த நிலையில், மேலும் புதிராக அந்த உடல் ஆணே இல்லை பெண் என டி.என்.ஏ பரிசோதனையில் வெளிவந்து மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இன்சூரன்ஸ் பணத்துக்காக நண்பரை கொலை செய்துவிட்டு, நாடகமாடிய சுரேஷ் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி குடிசை வீடு எரிந்ததில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாக, சுரேஷின் உடலை காவல்துறை உடற் கூறாய்வு முடித்து அவரது வீட்டில் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்துள்ளனர். அதே செப்டம்பர் மாதத்தில் இருந்து டில்லிபாபு கானவில்லை என டில்லிபாபு தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து எண்ணூர் போலீசாரை அலைகழித்துள்ளனர். அதன் பிறகு சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தப் பிறகு, நீதிமன்ற உத்தரவின் பெயரில் மீண்டும் எண்ணூர் போலீசார் விசாரணை மேற்க்கொண்டன்ர். அந்த விசாரணையில், இறந்தவர் சுரேஷ் இல்லை, டில்லிபாபு எனத் தெறியவந்தது. மேலும், தான் வாங்கிய 1 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் பணத்திற்காக நாடகமாடி தன்னுடைய நண்பனே கொலை செய்து எரித்தாக அவர்களே ஒப்புக்கொண்டதின் பெயரிலே இந்த வழக்கு முடிவுக்கு வந்ததுள்ளது.

இல்லை என்றால் இந்த வழக்கு ஒரு தற்கொலை வழக்காவே போலீசாரால் முடித்துவைக்கப்பட்டு இருக்கும். மேலும்  இப்படி தற்கொலை வழக்காவே முடித்து வைப்பதற்காகவே ஒரத்தி போலீசார் செயல்பட்டு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளது. மேலும் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படும் டில்லி பாபுவின் பிரேதம் தானா என்கிற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.  இறந்துபோனதாக சொல்லப்படும் சுரேஷ் பிரேதத்தின் மீது விசாரணை செய்த ஒரத்தி போலீசாரும், பிரேதப் பரிசோதனை செய்த செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவர்களும், இறந்துபோன சடலம் சுரேஷ் என்பவருடையதுதான் என்பதை உறுதி அளித்து அன்றே சான்று வழங்கியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில்தான், சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் டி.என்.ஏ சோதனையின் மூலமாக இறந்தவர் ஆண் இல்லை, பெண் என டி.என்.ஏ அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் மேலும் சர்ச்சையைக் கிளப்பியுஎ்ளது. உண்மையில் இறந்து போனது யார்? அது யாருடையை உடல்? எதற்காக இப்படி நாடகம் ஆடினார்கள்?  எனக் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனை ஐனவரி 31 ஆம் தேதி வந்த நக்கீரனில் இன்சூரன்ஸ் கொலை? போலீஸ் - மருத்துவர் கூட்டுச்சதி? எனத் தெளிவாக வெளியிட்டிருந்தோம். தற்போது அது வெட்ட வெளிச்சாமாகி உள்ளது. அப்படி என்றால் டில்லிபாபு எங்கே உள்ளார்? இந்தப் பெண் உடல் யார்? எதற்காக குற்றவாளிக்கு காவல்துறையும், மருத்துவரும் துணை போனார்கள்? என்ற கேள்விகளுக்கு பதில் குற்றவாளி வாய் திறந்தாலே உண்மை வெளிச்சத்திற்கு வரும் .