Skip to main content

பழிவாங்கும் ஆசிரியர்? மாணவியின் தாய் வேதனை

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

Student's mother complains against teacher in Coimbatore

 

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் தனியார் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் பிரபலமான இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதே நேரம், இந்தப் பள்ளியில் முக்கிய விதி ஒன்று பின்பற்றப்படுகிறது. அதில், இங்கு படிக்கும் மாணவர்கள் கட்டாயம் ஆங்கில மொழியில் தான் பேச வேண்டும். அப்படி மாறாக தமிழில் பேசினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

 

இத்தகைய சூழலில், பீளமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்தப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவி தன்னுடைய பள்ளித் தோழிகளுடன் உணவு அருந்தும் இடத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்தச் சமயம், மாணவியுடன் ஆசிரியரின் மகளும் இருந்துள்ளார். அப்போது, அங்கிருந்த மாணவர் ஒருவர், "நீ பாக்க என்னோட தங்கச்சி மாதிரியே இருக்க" என கூறியுள்ளார்.

 

அதற்கு, அந்த ஆசிரியரின் மகள் உன்னோட தங்கச்சி பேர் என்ன?" எனக் கேட்டுள்ளார். அந்த மாணவனும் கூறியுள்ளார். இதற்கிடையில், அங்கிருந்த மூன்று மாணவர்களும் தமிழில் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த ஆசிரியர் ஒருவர் அங்கிருந்த ஒரு மாணவியை மட்டும் கடுமையாகத் திட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்த மாணவிக்கு பிளாக் மார்க் போட்டுவிட்டு நூறு ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

 

அதேநேரம், அபராதம் விதித்த ஆசிரியரிடம் அந்த மாணவி டியூசன் படித்து வந்துள்ளார். ஆனால், அந்த மாணவி டியூசன் செல்வதைப் பாதியில் நிறுத்தியதால் ஆசிரியருக்குக் கோபம் ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் ஆத்திரமடைந்து மாணவியிடம் தொடர்ந்து கடுமையாக நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவி இச்சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இதில் அலட்சியம் காட்டிய பெற்றோர் இந்த விவகாரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது.

 

இத்தகைய சூழலில், தன்னிடம் அந்த ஆசிரியர் கடுமையாக நடந்துகொள்வதாகவும், அபராதம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறி அழுதுள்ளார். ஒருகட்டத்தில், அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இது குறித்துப் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அங்கிருந்து எந்தப் பதிலும் சரியாகக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் இச்சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வீடியோவில் நடந்தவற்றை விவரமாகக் கூறிய அவர், டியூசனை பாதியில் நிறுத்திய தனது மகளை பழிவாங்குவதற்காக ஆசிரியர் கடுமையாக நடந்து கொள்வதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதே சமயம், ஆசிரியரின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது போன்ற ஆசிரியர்கள் மீது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குழந்தைகள் மனதில் ஏற்படும் தேவையற்ற எண்ணங்களில் இருந்து பாதுகாக்க முடியும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாய் கண்முன்னே மகனுக்கு நேர்ந்த துயரம்; நொடிப் பொழுதில் நடந்த சம்பவம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Son passed away in front of mother eyes

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி அருகே அமைந்துள்ளது கருப்புசாமி வீதி. இப்பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மகன் ஆனந்த். இளைஞரான இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். அதனால், மிகுந்த கவனமுடன் குடும்பத்தினர் ஆனந்தை அரவணைப்புடன் வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், ஆனந்திற்கு உயர் ரத்த அழுத்த பிரச்சனை  ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, கடந்த 21ஆம் தேதி இரவு ஆனந்தின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி சியாமளா இணைந்து ஆனந்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முன்னதாக பேருந்துக்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே சாலையின் ஓரத்தில் நடந்துச் சென்றுள்ளனர். அப்போது, ஆனந்த் தாய் மற்றும் பாட்டியின் கையை விட்டு நடந்து சென்றுள்ளார். குடும்பத்தினரும் ஆனந்த் சரியாக நடந்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடன் கூடவே நடந்துச் சென்ற நிலையில், திடீரென ஆனந்த் அவ்வழியே வந்த துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்ற பேருந்தின் முன்பாக பாய்ந்துள்ளார்.

நொடிப் பொழிதில், ஆனந்த் பேருந்து முன் பாய தாய் மற்றும் பாட்டியின் கண் முன்னே  தனியார் பேருந்தின் முன் பகுதியில் சிக்கியுள்ளார். இதில், பேருந்தின் முன் சக்கரம் தலையில் ஏறியதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மகன் தடுமாறி விழுந்து கண்முன்னே உயிரிழந்ததைப் பார்த்த தாய்  லட்சுமி நடுரோட்டில் கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரழந்தவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து நடந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், உடல் நிலை சரியில்லாத ஆனந்தை அவரது தாய் மற்றும் பாட்டி சாலையின் ஓரத்தில் நடந்து கூட்டிச் செல்கின்றனர். அப்போது, திடீரென் அவ்வழியாக தனியார் பேருந்து வந்துள்ளது. அதில், திடீரென ஆனந்த் பாய்கிறது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், தனியார் பேருந்து ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு வண்டியை திருப்பி பிரேக் அடித்துள்ளார். ஆனாலும், யாரும் எதிர்பாராத வகையில் தனியார் பேருந்தின் முன் சக்கரம் ஏறியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்யும் நெட்டிசன்கள் மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாத இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து முன்பு பாய்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தாயின் கண்முன்னே விபத்தில் சிக்கி மகன் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.