Skip to main content

பள்ளிகளுக்கு செல்லும் அரசாணை நிறுத்தி வைப்பு! -குழப்பத்தில் மாணவர்கள்!  

Published on 29/09/2020 | Edited on 29/09/2020
ddd

 

 

அக்டோபர்-1 ந்தேதி முதல் பள்ளிகளுக்கு சென்று மாணவர்கள் தங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்த அரசாணையை திடீரென்று இன்று நிறுத்தி வைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் பெற்றோர்களும் மாணவ-மாணவிகளும் குழப்பமடைந்துள்ளனர். 

 

தளர்வுகளுடன் கூடிய நான்காம் கட்ட பொது முடக்கம் 30-ந்தேதி முடிவடையும் சூழலில், அக்டோபர் 1 முதல் 10,11,12 ஆகிய வகுப்புகளின் மாணவ-மாணவிகள் அவரவர் பள்ளிகளுக்கு சென்று பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம் என கடந்த வாரம் அறிவித்திருந்தது பள்ளிக்கல்வித் துறை. 

 

கடந்த சில வாரங்களாக ஆன்லைன் க்ளாஸ்களை தொடர்ச்சியாக பள்ளிகள் நடத்தி வருகின்றன. ஆன் லைன் க்ளாஸ்களில் பாடம் தொடர்பான புரிதலில் சிக்கல்கள், சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்காதது என பல்வேறு பிரச்சனைகளை மாணவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான, புகார்கள், பள்ளிக்கல்வித்துறைக்கு சென்றதால்தான், பள்ளிகளுக்குச் சென்று சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 

 

இந்த நிலையில், பொது முடக்கத்தில் மேலும் தளர்வுகள் கொடுக்கப்பட வேண்டுமா? அல்லது தற்போதைய நிலையே நீடிக்க வேண்டுமா? என்பது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று விரிவான ஆலோசனை நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

 

இனி அடுத்தடுத்து வரும் மாதங்களில் பண்டிகைகள் அதிகம் வரவிருப்பதால் கூடுதல் தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட பொதுமுடக்கத்தை அமல்படுத்தலாமா? அமல் படுத்தினால் எந்தெந்த துறைகளுக்கு தளர்வுகள் அளிப்பது? என்கிற ஆலோசனையை நடத்தியிருக்கிறது மத்திய அரசு. அதனால், மத்திய அரசின் முடிவுகளை தெரிந்துகொண்டு அதற்கேற்ப முடிவுகளை எடுக்க நினைக்கிறது எடப்பாடி அரசு. அதேசமயம், மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தியப் பிறகு தமிழகத்தின் நலன் கருதியும் சில முடிவுகளை எடுக்க வேண்டும் என விரும்புகிறாராம் எடப்பாடி. 

 

இந்த நிலையில், “பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம் என்கிற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’’ என அறிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, “பெற்றோர்களின் கருத்துகளையும், மருத்துவர்களின் ஆலோசனையையும் கேட்டறிந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்றும் தெரிவித்திருக்கிறார். 

 

“பள்ளிக்கல்வி விசயத்தில் துறை சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளும் அரசு சார்ந்து எடுக்கப்படும் முடிவுகளும் அடிக்கடி முரண்படுவதால் பெற்றோர்களும் மாணவர்களும் மன உளைச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும் ஆட்படுகிறார்கள்” என்கின்றனர் கல்வியாளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.