Skip to main content

ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய எஸ்.பி

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

இராணிப்பேட்டை மாவட்டத்தில், நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

 

The SP soldiers provided groceries to the volunteers



இந்நிலையில் கரோனா பரவலை தடுக்கும் பணியில் காவல்துறைக்கு துணையாக ஈடுபட்டுள்ள, ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் மற்றும் செயல்பட முடியாத முதியவர்கள் என 2 ஆயிரம் பேருக்கு இராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம், மளிகை பொருட்கள், காய்கறிகள் என 29 பொருட்கள் அடங்கிய பையை ஏப்ரல் 11ந் தேதி மாலை அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.

 

சார்ந்த செய்திகள்