Skip to main content

கடத்தப்படும் 'பாலிகீட்ஸ்'... அழியும் கடல் வளம்!

Published on 12/11/2019 | Edited on 12/11/2019

பாலிகீட்ஸ் கிலோ ரூ.3000 என்பதால், பணத்திற்கு ஆசைப்பட்டு விபரீதம் தெரியாமல் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதரமாகவும், கடலரிப்பை தடுக்கும் அலையாத்திக் காடுகளின் பாதுகாவலனாகவும் விளங்கி வரும் அதிசய உயிரினமான "பாலிகீட்ஸ்" மண்புழுக்களை சதுப்பு நிலத்தில் தோண்டி எடுத்து சென்னைக்கு கடத்த முயன்ற 8 நபர்களை வனத்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 smuggling polykheds destroy marine resources

'பாலிகீட்ஸ்' கடற்கரைப் பகுதியில் கடலரிப்பை காக்கும் சதுப்பு நிலப்பகுதியிலுள்ள மாங்குரோவ் காடுகள் எனப்படும் அலையாத்தி காடுகளின் ஆதாரம் இந்த "பாலிகீட்ஸ்" எனப்படும் மண்புழுக்களே.!! இவ்வகை அலையாத்திக்காடுகள், மன்னார்வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தியில் அதிகம். இத்தகைய காடுகளில் வாழ்ந்து வரும் "பாலிகீட்ஸ்" மண்புழுக்கள் மண்ணை சீர்ப்படுத்தி ஈரத்தன்மையுடன் வைத்துக்கொள்கிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். அதுபோக "பாலிகீட்ஸ்" இருக்குமிடத்தில் இறால் மற்றும் மீன்கள் வளம் நிறைந்தே காணப்படும்.

இயற்கையான உணவாய், மிகுந்த வளர்ச்சியைத் தரும் "பாலிகீட்ஸ்" மண்புழுக்கள் பண்ணையிலுள்ள வளர்ப்பு இறாலின் வளர்ச்சிக்காக அதிகளவில் வேட்டையாடப்பட்டு மிகுந்த அளவில் கடத்தப்பட்டு வருகின்றது. இதேவேளையில், மண்புழுக்கள் தோண்டி எடுத்து கடத்தப்பட்டால் ஈரத்தன்மை இல்லாமல் அலையாத்திக் காடுகள் உள்ள இடம் கடினமாகி இதனால் கடலரிப்பு எளிதில் நடக்கும் என்பதால் "பாலிகீட்ஸ்" மண்புழுக்கள் வேட்டையாடுதலை வனத்துறை தடைச்செய்துள்ளது. எனினும், ஆங்காங்கே கடத்தல் சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது இல்லை.

 smuggling polykheds destroy marine resources

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வளையர்வாடி பகுதியில் இருந்து "பாலிகீட்ஸ்" மண்புழுக்களை சென்னைக்கு கடத்தி செல்வதாக வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வளையர்வாடி பகுதியில் வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது பெட்டி பெட்டியாக 5 லட்சம் மதிப்புள்ள 150 கிலோ எடையுள்ள "பாலிகீட்ஸ்" மண்புழுக்களை கைப்பற்றி, கடத்தலில் ஈடுப்பட்ட கடலூரை சேர்ந்த பெருமாள், செங்கேணி, விஜய், ராயர், சுப்பிரமணியன், சந்திரன், கோபி மற்றும் கார்த்திக்கேயன் உள்ளிட்ட எட்டு நபர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றது வனத்துறை. இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.